வருமானம் இல்லாவிட்டாலும் மனைவிக்கு ஜீவனாம்சம் தர வேண்டியது கணவரின் கடமை : அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

லக்னோ,ஜன.29- வருமானம் இல்லா விட்டாலும் மனைவிக்கு வாழ்வூதியம் வழங்க வேண்டியது கணவரின் கடமை என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இணையர் கடந்த 2015-இல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் 2016ஆ-ம் ஆண்டு, கணவர் மற்றும் அவரு டைய குடும்பத்தினர் வரதட்சணை கேட்பதாக மனைவி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அத்துடன் அவர் தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுள்ளார். இது தொடர்பான வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன்றம், மனைவிக்கு மாதந்தோறும் வாழ்வூதியமாக ரூ.2 ஆயிரம் வழங்குமாறு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கணவர் சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிரேணு அகர்வால் தலைமையிலான அமர்வில் விசாரணை நடை பெற்றது. அப்போது, “எனது மனைவி பட்டப் படிப்பு படித்துள்ளார். மாதம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக் கிறார். கூலி வேலை செய்து வரும் நான் இப்போது உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறேன். வாடகை வீட்டில் வசித்து வரும் நான் பெற்றோரை கவனித்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளேன். எனவே என்னால் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்க முடியாது” என கணவர் தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதி கணவரின் மனுவை தள்ளுபடி செய்தார்.மேலும் அவர் பிறப்பித்த உத்தரவில், “மனைவி சம்பாதிக்கிறார் என்பதற்கான ஆதா ரத்தை கணவர் தாக்கல் செய்யவில்லை. உடல் ஆரோக்கியமுடன் உள்ள தால் உடல் உழைப்பின் மூலம் பணம் சம்பாதிக்கும் தகுதி கணவருக்கு உள் ளது. எனவே, வருமானம் இல்லாவிட் டாலும் மனைவிக்கு வாழ்வூதியம் வழங்க வேண்டியது அவரின் கடமை” என தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *