கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
12.10.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* நவம்பர் 23-ல் திருமணங்கள் அதிகம் நடப்பதால், ராஜஸ்தான் மாநில தேர்தல் தேதி நவம்பர் 25க்கு மாற்றம். தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
* பீகார் ஜாதிவாரி கணக்கெடுக்குப் பின் தகவல்கள் சட்டமன்றத்தில் தரப்படும், நிதிஷ் பேட்டி.
தி டெலிகிராப்
* 2014ஆம் ஆண்டு முதல் இந்திய பொதுத் தணிக்கையாளர் மற்றும் தலைமை கணக்குத் தணிக்கை யாளர் மீது மோடி அரசு கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு.
* பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீடு குறித்து, பீகார் சட்டமன்றத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தாக்கலுக்குப் பின், முடிவு செய்யப்படும் என முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு.
– குடந்தை கருணா