ஆதித்யா விண்கலத்தின் மேக்னடோ மீட்டர் செயல்படத் தொடங்கியது இஸ்ரோ தகவல்

2 Min Read

சிறிஹரிகோட்டா, ஜன.27 சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா விண்கலத்தின் மேக்னடோ மீட்டர் செயல்பட தொடங்கியது என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன மான இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறு வனம் (இஸ்ரோ) சூரியனின் வெளிப் புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் நவீன விண் கலத்தை சில ஆண்டுகளாக வடிவ மைத்தது. இதில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும் வகை யில் நவீன கருவிகள் பொருத்தப் பட்டு உள்ளது. இந்த விண்கலம் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் சிறிஹரிகோட்டா வில் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த விண்கல மானது விண்வெளியில் 127 நாட்கள் பயணித்து பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள எல்-1 எனும் லெக்ராஞ்சியன் புள்ளியை மய்யமாக கொண்ட சுற்றுப் பாதைக்கு சென்றது. அந்த இடத்தில் ஆய்வுக்காக ஜன. 6-ஆம் தேதி நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள் அங்கிருந்த படியே சூரியனை ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண் டனர்.

அதன்படி சூரியனை சுற்றி உள்ள கரோனா, போட்டோஸ்பியர் மற்றும் குரோமோஸ்பியர் பகுதிகளை விண்கலம் ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில், ஆதித்யா விண்கலத் தின் மேக்னடோ மீட்டர் சென்சார் பாகங்கள் 132 நாட் களுக்கு பிறகு வெற்றிகரமாக செயல்படத் தொடங்கி யுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில், ‘விண்வெளியில் காந்தப் புலத்தை அறிவதற்காக பொருத்தப்பட் டிருந்த 6 மீட்டர் மேக்னடோ மீட்டர் தற்போது வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த கருவி சூரியன் மற்றும் இதர கோள்களின் காந்தப்புலத்தை அளவிடும். அதன் படி, 132 நாட்களாக இயக்கப் படாமல் இருந்த மேக்னடோ மீட்டரின் ஆண் டனாக்கள் ஜன.11-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட் டுள்ளன. இதிலுள்ள 2 சென்சார்களும் நல்ல நிலையில் ஆய்வை தொடர் கின்றன’ என்று கூறப்பட்டுள்ளது.
இஸ்ரோ அனுப்பியுள்ள ஆதித்யா விண்கலம் அடுத்த 5 ஆண்டுகள் வரை சூரியனின் செயல்பாடுகளை கண் காணித்து ஆராயும் வகையில் உருவாக் கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *