தமிழ்நாடு அரசின் “அனைத்தும் சாத்தியம்” அருங்காட்சியகத்திற்கு விருது முதலமைச்சரிடம் காண்பித்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலர் வாழ்த்து

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை,அக்.13- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் நேற்று தலைமைச் செயலகத்தில், Mphasis  மற்றும் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்கான தேசிய மய்யத்தால் 28.09.2023 அன்று டில்லியில் நடைபெற்ற “உலகளாவிய வடிவமைப்பு” விருதுகள் 2023 நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் “அனைத்தும் சாத்தியம்” அருங்காட்சி யகத்திற்கு வழங்கப்பட்ட விருதினை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, காண்பித்து வாழ்த்துப் பெற்றார். 

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் சென்னை, காமராஜர் சாலை யில் உள்ள மாற்றுத் திறனாளி களுக்கான மாநில ஆணையர் அலுவ லகத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள “அனைத்தும் சாத்தியம்” என்ற மாற்றுத் திறனா ளிகளுக்கான அருங்காட்சியகத்தை முதலமைச்சர் 6.6.2022 அன்று திறந்து வைத்தார்.

“அனைத்தும் சாத்தியம்” என்ற அருங்காட்சியகமானது மாற்றுத் திறனாளிகள் உபயோகப்படுத்தும் 200-க்கும் மேற்பட்ட உதவி உபகர ணங்கள் மற்றும் அவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பொருட்கள் அங்கு வருகை புரிபவர்களுக்கு அவர்கள் தனிச்சையாக வாழ்வதற்கு ஏதுவாக காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அருங்காட்சியகத்தில் மாற்றுத் திறனாளிகள் அணுகக்கூடிய இல்லம், வேலை செய்யும் இடத்தில் தேவைப்படும் உபகரணங்கள் மற் றும் அவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு ஓய்வு நேரங் களில் பயன்படுத்தும் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்புமிக்க தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான “அனைத்தும் சாத்தியம்” அருங் காட்சியகத்திற்கு டில்லியில் 28.09.2023 அன்று Mphasis மற்றும் மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு மேம்பாட்டிற்கான தேசிய மய்யத்தால் “உலகளாவிய வடிவ மைப்பு” விருதுகள் 2023 நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட விருதினை, மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர் ஏ.கே.கமல் கிஷோர், மாற்றுத்திறனாளிகள் அருங்காட்சியகத்தின் ஒருங்கி ணைப்பாளர்களுடன் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வின்போது, அமைச்சர் பி. கீதா ஜீவன், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் ஏ.கே.கமல் கிஷோர், “அனைத்தும் சாத்தியம்” அருங்காட்சியகத் தலை வர் பூணம் நடராஜன், மேலாளர் ஏ. பிரபாகரன், கூடுதல் மேலாளர் ஷிவானி, பேச்சு பயிற்சியாளர் காபா நாசியா ஓமர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *