‘நீட்’ – மற்றொரு தற்கொலை!

1 Min Read

லக்னோ,ஜன.26– நாட்டிலேயே அதிக ‘நீட்’ தேர்வு பயிற்சி மய்யங்கள் கொண்ட இடமான பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரில் நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களின் தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வரு கிறது. கோட்டாவில் ஆண்டுக்கு சராசரியாக 15-க்கும் மேற் பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து வரும் நிலையில், கடந்தாண்டு அதிகபட்சமாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 30 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர்.
இந்நிலையில், 23.1.2024 அன்று இரவு கோட்டாவில் நீட் தேர்வுக்கு படித்து வந்த உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த முகமது சையத் என்ற மாணவர் ஜவஹர் நகர் என்ற பகுதியில் உள்ள தனது தங்கும் விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

TAGGED:
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *