இந்தியாவில் மேலும் 198 பேருக்கு கரோனா பாதிப்பு

viduthalai
1 Min Read

புதுடில்லி,ஜன.26- கரோனாவின் புதிய வகையான ‘ஜேஎன்.1’ வகை தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த வகை கொரோனா வேகமாகப் பரவுவதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுமென கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக ஜே.என்.1 வகை உருமாறிய கரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ ஆரம்பித்தது.

கடந்த மாதம் டிசம்பர் 5ஆம் தேதி வரை இரண்டு இலக்கங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்தது. ஆனால் குளிர்காலம் தொடங்கி உள்ளதால் ஜேஎன்.1 வைரஸ் பரவல் சற்று அதிகமாகி உள்ளது. கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 841 பேர் பாதிக்கப்பட்டனர். இது கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதத்தில் பதிவான அளவில் 0.2 விழுக்காடு ஆகும்.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 198 பேருக்கு புதிய வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,764 ஆக குறைந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி பஞ்சாப்பில் ஒருவர் தொற்றுக்கு உயிரிழந்துள்ளார்.

ஜேஎன்.1 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்கள் 92 விழுக்காடு பேர் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று குணமாகி விடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நோயிலிருந்து மீண்டவர் களின் எண்ணிக்கை 4.4 கோடியாக ஆக அதிகரித்துள்ளது என்றும் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 98.81 விழுக்காடாக உள்ளது என ஒன்றிய சுகாதார அமைச்சகம் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *