பிரதமர் மோடி கடந்த புதனன்று கேரள மாநிலம் குருவாயூர் கோவிலுக்குச் சென்று வழி பட்டார். கோவிலின் கருவறைக்குச் சென்ற பொழுது பிரதமர் மோடி தான் முன்பு அணிந்து இருந்த உடையை மாற்றி, கேரள மாநிலத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சால்வை அணிந்து சென்றார்.
எவ்வித நிகழ்வுகளுக்கும் சென்றாலும் பிரதமர் மோடி அடிக்கடி உடை மாற்றம் செய்யும் விவகாரம் வழக்கமானது என்றாலும், குருவாயூர் கோவிலில் தன்னுடைய பாதுகாப்புக்கு வரும் எஸ்பிஜி கமாண்டோக்களுக்கும் மோடி தன்னைப் போலவே வேட்டி, சால்வை அணிய வைத்துள்ள காட்சிப் பதிவு வைரலாகி வருகிறது. காட்சிப் பதிவின் நம்பகத்தன்மை இன்னும் முழுமையாக சரிபார்க்கப்படவில்லை என பல்வேறு மழுப்பலான தகவல் வெளியானாலும், எஸ்பிஜி வீரர்கள்தான் வேட்டி, சால்வை அணிந்து வருகிறார்கள் என ஆதார ஒளிப்படங்களை வெளியிட்டு ஆங்கில ஊடகங்கள் உண்மையைப் போட்டு உடைத்துள்ளன.
கோவில் பாரம்பரியம் என்று கூறி பிரதமர் மோடி தன்னை போலவே எஸ்பிஜி கமாண்டோக் களின் கருப்பு நிற கோட், சூட் உடைகளை கழற்றி வைத்து, விதிகளை மீறி வேட்டி, சால்வை அணிந்து வந்துள்ள விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூகவலைத் தளங்களில் இதுதொடர்பான காட்சிப் பதிவு வைரலாகி வருகிறது.
ஆன்மிகம் – ஆகமம் – வசதிக்கேற்ப மாறுமோ! இதுதான் பிரதமர் மோடி!

Leave a Comment