பீகார் மாநில மேனாள் முதலமைச்சர் கர்ப்பூரி தாக்குருக்கு ‘பாரத ரத்னா’ விருது

1 Min Read

பீகார் மாநில மேனாள் முதலமைச்சர் கர்ப்பூரி தாக்குருக்கு ‘பாரத ரத்னா’ விருது
குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு

புதுடில்லி, ஜன.24 பீகார் மேனாள் முதலமைச்சர் மறைந்த கர்ப்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது அறி விக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிக உயரிய ‘பாரத ரத்னா’ விருது கடந்த 1954-ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது. கலை, இலக்கியம், அறிவியல், பொது சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இந்த விருது வழங்கப் படுகிறது. 2019-இல் மேனாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மறைந்த சமூக ஆர்வலர் நானாஜி தேஷ்முக், மறைந்த இசைக் கலைஞர் பூபன் ஹசாரியா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு, கடந்த சில ஆண்டுகளாக யாருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், குடியரசு நாளையொட்டி பீகார் மேனாள் முதலமைச்சர் கர்ப்பூரி தாக்குருக்கு, அவரது மறைவுக்குப் பிறகு பாரத ரத்னா விருது அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை குடியரசுத் தலைவர் மாளிகை நேற்று (23.1.2024) இரவு வெளியிட்டது.
பீகாரின் சமஸ்திபூர் மாவட்டம் பிதோஜ்கியா கிராமத்தில் 1924 ஜனவரி 24-ஆம் தேதி பிறந்தார் கர்ப்பூரி தாக்குர். மாணவ பருவத்தில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று 26 மாதங்கள் சிறையில் இருந்தார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் சோஷலிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1952-இல் முதல்முறையாக பீகாரின் தேஜ்பூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மண்டல் குழு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்பதில் உறுதி காட்டியவர்!
கடந்த 1970-1971 மற்றும் 1977-1979 என 2 முறை பீகார் முதலமைச்சர் பதவி வகித்தார். அவரது ஆட்சிக் காலத்தில் பீகாரில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப் பட்டது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய அவர் மக்கள் தலைவர் என்று அழைக்கப் பட்டார். 1988 பிப்ரவரி 17-ஆம் தேதி காலமானார். அவரது 100-ஆவது பிறந்தநாள் இன்று (24.1.2024) கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *