மக்களவைத் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் விளக்கம்

1 Min Read

புதுடில்லி, ஜன.24 மக்களவை தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

டில்லி யூனியன் பிரதேசத்தின் உதவி தலைமை தேர்தல் அதிகாரி மிசோ சமீபத்தில் அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில், ‘ஏப்ரல் 16-ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கும். எனவே, தேர்தல் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்தி இருந்தார்.

இந்த சுற்றறிக்கையை ஆதாரமாக வைத்து, ஏப்ரல் 16-ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கும் என்று ஊடகங்கள், சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதுகுறித்து டில்லி யூனியன்பிரதேச தலைமை தேர்தல் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. ‘தேர்தல் நடவடிக்கைகளை விரைவாக தொடங்க, ‘மேற்கோளாக’ மட்டுமே ஒரு தேதி (ஏப்ரல் 16) சுற்றறிக் கையில் குறிப்பிடப்பட்டது’ என்று தேர்தல் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது, மார்ச் 10-ஆம் தேதி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது. 2024-ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் அட்டவணை பிப்ரவரி கடைசி வாரம் அல்லது மார்ச் 10-ஆம் தேதிக்கு முன்பாக வெளியிடப்படும். தேர்தலையொட்டி, நாடு முழுவதும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் பணி ஜனவரி 31-ஆம் தேதிக்குள் நிறைவடையும். ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *