ஆடிட்டர் சி.என்.ஜெயச்சந்திரன் மறைவு இரா.முத்தரசன் இரங்கல்

1 Min Read

சென்னை, ஜன. 20- ஆடிட்டர் சி.என்.ஜெயச்சந்திரன் மறைவு குறித்து இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தமிழ் நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத் துள்ள இரங்கல் அறிக்கை வருமாறு,
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் ஆரம்ப கால முன்னோடியும், தலைசிறந்த மூத்த தணிக் கையாளருமானசி.என்.ஜெயச்சந்திரன் (91) நேற்று (19.01.2024) காலை 8 மணியளவில் பெங்க ளூருவில் உள்ள அவரது மகன் வீட்டில் காலமா னார் என்பது ஆழ்ந்த வருத்தத்திற்குரியது.
ஆடிட்டர் சி.என்.ஜெயச்சந்திரன் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் ஆரம்ப கால முன்னோடி களில் ஒருவர். மோகன் குமாரமங்கலம், கே.பால தண்டாயுதம், ப.மாணிக் கம், வழக்குரைஞர் என்.டி. வானமாமலை போன் றோருடன் இணைந்து பணியாற்றியவர்.
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிக்கும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் மற்றும் அதன் இணைப்பு அமைப்புகளின் நீண்ட கால தணிக்கையாளராக மிக சிறப்பாக பணியாற் றியவர். இளம் தணிக்கை யாளர்களை உருவாக்கிய தில் குறிப்பிடத்தக்கவர். அவரது மறைவு பெரும் வேதனையளிக்கிறது.
அன்னார் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட் சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வது டன், அவரை பிரிந்து வாடும் அவரது குடும் பத்தினருக்கும், தணிக் கையாளர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
-இவ்வாறு இரா.முத்த ரசன் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *