அமலாக்கத்துறையை தவறாக வழி நடத்தும் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்

2 Min Read

அய்.ஆர்.எஸ். அதிகாரி பாலமுருகன் போராட்டம்

சென்னை, ஜன.19 அம லாக்கத்துறையை தவறுதலாக வழிநடத்தும் ஒன்றிய நிதிய மைச்சர் நிர்மலா சீதாரமன் பதவி விலகக் கோரி அய்.ஆர்.எஸ் அதிகாரி பால முருகன் (ஓய்வு) ஒருநாள் அடையாள பட்டினிப் போராட் டம் மேற்கொண்டார்.
சென்னை நுங்கம்பாக்கத் தில் ஜி.எஸ்.டி அலுவலகத்தில் 17.1.2024 அன்று பட்டினிப் போராட்டம் மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமீபத்தில் ஏழை விவசாயிகளுக்கு அம லாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியது என்பது ஒன்றிய அரசு தவறுதலாக வழிநடத் துகின்றது என்பதைக் காட்டு கின்றது. ‘ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடை சியில் மனிதனைக் கடிப்பது’ போல, அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் ஆகியோ ரைத் தாண்டி வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் ஏழை விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க அமலாக் கத்துறையை உபயோகப் படுத்துகின்றனர்.

இது தொடர்பாக ஏற்கெ னவே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி யிருந்தேன். அதேபோல், இந்தத் துறையில் கீழ் நிலை முதல் மேல் நிலை அதிகாரிகள் வரை ஒரு தமிழரும் இல்லை. எனவே தான் என்னுடைய கோரிக்கையாக அமலாக்கத் துறையில் 50 சதவீதம் தமி ழர்கள் இருக்க வேண்டும், ஏழை விவசாயிகளுக்கு ஜாதிப் பெயரை குறிப்பிட்டு அழைப்பாணை அனுப்பிய நிலையில் அதற்கான முறை யான விளக்கத்தை ஒன்றிய நிதியமைச்சரும் கொடுக்க வில்லை; சம்மந்தப்பட்ட அம லாக்கத்துறை அதிகாரிகளும் கொடுக்கவில்லை. இதற்கு பாஜ நிர்வாகிகள் தான் விளக்கம் கொடுக்கின்றனர்.

ஏற்கெனவே, பாஜவின் அங்கமாக அமலாக்கத்துறை செயல்படுவதாக குற்றச் சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ள நிலையில் அதனை நிரூபிக்கும் வகையில் அவர்கள் செயல்படுகின்றனர். ஜனநாயக நாட்டில் மக்களின் உரிமைகளை பறிக்கும் வகை யில் செயல்படும் நிர்மலா சீதாராமன் பதவி விலகக் கோரி அனுப்பி இருந்த கடிதத்திற்கு இதுவரை எந்த வித பதிலும் இல்லை. அதற் கான தீர்வு கிடைக்கவே பட் டினிப் போராட்டம் மேற் கொண்டுள்ளேன்.
தற்போதைய சூழலில் அமலாக்கத் துறையை கைப் பொம்மையாக வைத் திருப்பது போல, அனைத்து ஒன்றியத் துறை களையும் தங்களின் கட்டுப் பாட்டில் வைத்திருக்க முயற் சிப்பதற்கு யாராவது ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என் பதை கவனத்தில் கொண்டு நான் இந்த பட்டினிப் போராட்டத்தை மேற் கொள்கிறேன்.
இவ்வாறு கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *