பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில்!

2 Min Read

விதிமுறைகளை மீறி அதிகமானவர்களை ஏற்றிச்சென்ற போது படகு கவிழ்ந்து விபத்து!
2 ஆசிரியர்கள் உள்பட 14 மாணவர்கள் உயிரிழப்பு!

வதோதரா, ஜன.19 வதோதரா நகரை ஒட்டி அமைந்துள்ள ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் 14 பேர் மற்றும் 2 ஆசிரியர்கள் உயிரிழந்த விவகாரத் தில் உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல்.
மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் உயர் மட்ட விசா ரணைக்கு உத்தரவிட்டுள்ள குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல், விபத்து தொடர்பாக 10 நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனிடையே, விபத்தில் சிக்கிய படகில் 27 மாண வர்கள் பயணம் செய்ததாக வதோ தரா மாவட்ட ஆட்சியர் ஏ.பி.கோர் தெரிவித்துள்ளார்.

ஹார்ணி என்ற ஏரியில் படகு கவிழ்ந்துள்ளது. படகில் பயணித்த மாணவர்களைத் தேடும் பணி நிகழ் விடத்தில் தீவிரமாக மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துள்ளது. வதோதரா நகரை ஒட்டி அமைந் துள்ள ஹார்ணி ஏரிக்கு நேற்று
(18-1-2024) மாணவர்கள் சுற்றுலா நிமித்தமாக வந்துள்ளனர். இந்தச் சூழலில் 27 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணம் செய்த படகு ஏரியில் கவிழ்ந்துள்ளது. இதில் 10-க் கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், 14 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீட் புப் படை மற்றும் தீயணைப்பு படை யினர் இந்தப் பணியை மேற் கொண்டு வருகின்றனர். ஏரியின் அடிப்பகுதியில் சேறுகள் இருப்பதால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வதோதரா முனிசிபல் கார்ப்ப ரேசன் நிலைக்குழுவின் தலைவர் ஷீத்தல் மிஸ்திரி கூறுகையில், “படகில் சுமார் 35 பேர் இருந்தனர். படகின் அளவை தாண்டி அதிகளவு ஆட்களை ஏற்றி உள்ளனர். இத னால், படகு சமநிலையை இழந்து, கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில் படகில் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, தவறுகளுக்கு கடுமை யான தண்டனை வழங்கப்படும்” என்றார் அவர்.
இதேபோல், விபத்து குறித்து கருத்துத் தெரிவித்துள்ள மற்ற அதிகாரிகளும், ‘‘மாணவர்களும், ஆசிரியர்களும் லைஃப் ஜாக்கெட் அணியவில்லை” என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *