அசாமில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு நாட்டில் வெறுப்பு அரசியலை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பரப்புகின்றன

viduthalai
3 Min Read

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஜோர்கட் ஜன.19 பாரதீய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் நாட்டில் வெறுப்பை பரப்பி வருவதாக நடைப்பயணத்தின் போது ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யு மான ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நியாய நடைப்பயணம் என்ற பெயரில் மணிப்பூரில் இருந்து கடந்த 14ஆம் தேதி நடைப்பயணம்தொடங்கினார். இது நேற்று முன்தினம் (17-1-2024) வரை நாகாலாந்தில் நடந்தது.
நடைபயணத்தின் 5 ஆவது நாளான நேற்று (18-1-2024) அசாமுக்குள் நுழைந் தது. அசாமின் சிவசாகர் மாவட்டத்தில் இருந்து நடைப்பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். அங்கு வழிநெடுகிலும் ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜோர்கட் மாவட்டத்தின் மரியானி நகரை நேற்று நண்பகல் வேளையில் ராகுல் காந்தி அடைந்தார். அப்போது அங்குள்ள அரசு மய்யத்தில் மாநில அரசின் சுய உதவிக்குழு திட்டத்தில் இணைவதற்காக நூற்றுக்கணக்கான பெண்கள் விண்ணப்ப மனு வாங்குவதற்கு வரிசையில் காத்திருந்தனர்.

ராகுல் காந்தியின் நடைப்பயணம் அந்த வழியாக வருவதை கண்டதும், அவர்கள் தங்கள் வரிசையை விட்டு விட்டு சாலைக்கு ஓடோடி வந்தனர். இதைப்பார்த்ததும் ராகுல் காந்தியும் நடைப்பயணத்தை நிறுத்திவிட்டு அந்தப் பெண்களிடம் வந்தார். அப்போது ஏராளமான பெண்கள் ராகுல் காந்தியின் காலை தொட்டு வணங்க முயன்றனர். உடனே அவர்களை அவ்வாறு செய்ய வேண்டாம் என ராகுல் காந்தி தடுத்தார்.
பின்னர் அந்த பெண்கள் ராகுல் காந்தி யுடன் புகைப்படம் எடுக்க விரும்பினர். அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்ட ராகுல் காந்தி, அனைவரும் புகைப்படம் எடுக்க அனுமதித்தார்.
அவர்கள் ஒளிப்படம் எடுக்கும் வரை பொறுமையுடன் காத்திருந்தார். அத் துடன் அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் குடும்ப சூழல் குறித்து அக்கறையுடன் கேட்டறிந்தார்.
பின்னர் அங்கிருந்து ராகுல்காந்தியின் நடைப்பயணம் தொடர்ந்தது.

இது தொடர்பான காட்சிப் பதிவை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட் டிருந்தார்.அசாமுக்கான நீதி தொடங்கி விட்டது என்றும் அதில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
முன்னதாக சிவசாகர் மாவட்டத்தின் ஹலோவாட்டிங்கில் காங்கிரஸ் தொண் டர்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தி, மாநில பாரதீய ஜனதா அரசையும், ஒன்றிய அரசையும் கடுமையாக குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்தியாவிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அரசாக அசாம் அரசு உள்ளது. இங்கு என்ன நடக்கிறது என்பது உங் களுக்குத் தெரியும். இதை நாங்கள் மாநிலத்தில் நடைபெறும் நடைப் பயணத் தின்போது எழுப்புவோம்.
மணிப்பூரில் ஒரு சிவில் போர் போன்ற சூழல்தான் நிலவுகிறது. கடந்த ஆண்டு மே 3ஆம் தேதிமுதல் இன வன்முறை நடந்து வருகிறது. மக்கள் கொத்துக் கொத் தாக மடிகின்றனர். வீடுகள் தீக்கிரையாக் கப்படுகின்றன.
மாநிலம் பிளவுபட்டு இருக்கிறது. இன் னும் அமைதி திரும்பவில்லை. ஆனால், பிரதமர் மோடி இதுவரை அங்கே செல்ல வில்லை.
நாகாலாந்திலும் நாகா அரசியல் பிரச் சினைக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் போடப்பட்டும் மேற்கொண்டு எதுவும் நடக்கவில்லை.
பாரதீய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் நாட்டில் வெறுப்பை பரப்பி வருகின்றன. ஒரு பிரிவினரை மற்றொரு பிரிவுக்கு எதிராக போராட வைக்கின்றன. பொது மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து நாட்டைச் சுரண்டுவது மட்டுமே இவர் களின் வேலை.
இந்திய ஒற்றுமை நியாய நடைப் பயணத்தை மணிப்பூரில் நாங்கள் தொடங்கினோம். மராட்டியம் வரை இது தொடரும். இந்தியாவின் அனைத்து மதம், ஜாதி மற்றும் மொழியினரை இணைப்பது மட்டுமின்றி, நீதி வழங்கு வதுமே இந்த நடைப்பயணத்தின் நோக் கம் ஆகும்.
-இவ்வாறு ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

பிற்பகலில் நகசாரி என்ற இடத்தில் நடந்த தெருமுனை கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது,’அசாமில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த முதலமைச்சர் அசாம் முதலமைச்சர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே என தெரிவித்தார்.
மாலையில் ஜோர்கட் நகரில் மக்களி டையே ராகுல் காந்தி உரையாற்றும்போது, ‘முதலமைச்சர் ஹிமந்தா சர்மாவின் ஒட்டு மொத்த குடும்பமும் ஊழலில் ஈடுபட்டு வருகிறது. அவர், அவரது மனைவி, குழந் தைகள் என அனைவரும் ஊழல்வாதி களாக உள்ளனர் அவர் விலைகொடுத்து வாங்கப்பட்டது போல, தனது ஊழல் பணத்தால் அசாம் மக்களை விலை கொடுத்து வாங்கலாம் என நினைக்கிறார். ஆனால் அசாம் மக்கள் விலைபோக மாட்டார்கள் அவர்களுக்கு எந்த விலை யையும் கொடுக்க முடியாது’ என கூறி னார்.
அசாமில் நேற்று (18-1-2024) தொடங் கிய ராகுல் காந்தியின் நடைப்பயணம் வருகிற 25ஆம் தேதி வரை நடக்கிறது. மாநிலத்தின் 17 மாவட்டங்களில் 833 கி.மீ. தூரத்துக்கு ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *