திருநெல்வேலி வருகைதந்த தமிழர் தலைவர் ஆசிரியருக்கு உற்சாக வரவேற்பு

1 Min Read

அரசியல்

நெல்லை விரைவு ரயிலில் திருநெல்வேலி வருகைதந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு  மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ச.இராசேந்திரன் தலைமையில் உற்சாகம் பொங்க , எழுச்சிமுழக்கத்தோடு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  மேனாள் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. தலைமைச்செயற்குழு உறுப்பினருமான ந.மாலைராசா, மாநில திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம், மாவட்டச்செயலாளர் இரா.வேல்முருகன், காப்பாளர் இரா.காசி, மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், மாநில மாணவர்கழக சு.இனியன், பத்தமடை ப.இராசேந்திரன், மாநகர செயலாளர் வெயிலுமுத்து, மாநகர ப.க.தலைவர் முரசொலி முருகன், துணைச் செயலாளர் எம்.ஜி.ஏ..ஜார்ஜ், சேரன்மகாதேவி ஒன்றியத்தலைவர் கோ.செல்ல சுந்தரசேகர், மாவட்ட மாணவர்கழக தலைவர் செ.சூரியா, அம்பை.வழக்குரைஞர் சாமிநாதன், மாவட்ட மகளிரணி பொறுப்பாளர்கள் இரா.பானுமதி,கோவில்பட்டி செயா,அன்பரசி, மாவட்ட ப.க. தலைவர் சந்திரசேகர், நெல்லை பகுதி செயலாளர் ந.மகேசு, சு.இனியன், தச்சை பகுதி செயலாளர் மாரி.கணேசு உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பயனாடை அணிவித்து மகிழ்ந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *