ஒன்றிய அரசின் பொருளாதாரம் சென்செக்ஸ் சரிவு – ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.4.33 லட்சம் கோடி இழப்பு!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மும்பை, ஜன.18 இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் நேற்று (17.1.2024) ஒரே நாளில் 1,628 புள்ளிகள் சரிந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.4.33 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
கடந்த சில மாதங்களாக இந்திய பங்குச் சந்தைகள் ஏறுமுக மாக இருந்து வந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் – சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் – நிப்டி ஆகியவை புதிய உச்சங்களை எட்டின.

இந்நிலையில் நேற்று முன் தினம் (16.1.2024) பங்குச்சந்தையில் லேசான சரிவு காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2ஆ-வது நாளாக நேற்றும் பங்குச் சந்தை களில் கடும் சரிவு காணப்பட்டது. நேற்று வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,628 புள்ளிகள் சரிந்து 71,501 ஆகவும், நிப்டி 460 புள்ளிகள் சரிந்து 21,572 ஆகவும் நிலைபெற்றது.

கடந்த 16 மாதங்களில் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் சென்செக்ஸ் 2.23%, நிப்டி 2.09% சரிந்தது. துறை வாரியாக பார்க்கும்போது, நிப்டி அய்.டி. ( 0.64%)தவிர மற்ற அனைத்து துறை பங்குகளும் கடும் சரிவை சந்தித்தன. அதிகபட்சமாக நிப்டி பேங்க் 4.28% சரிந்தது. உலோகம், ரியல் எஸ்டேட், எண்ணெய் – எரிவாயு, வாகன துறைகள் 1 முதல் 3 சதவீதம் வரைசரிந்தன. இந்த சரிவால் முத லீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.4.33 லட்சம் கோடிஇழப்பு ஏற்பட்டது. அதிக பட்சமாக எச்டிஎப்சி பங்குகள் விலை ஒரே நாளில் 8.16% சதவீதம் சரிந்தது. இதுவே நிப்டி கடுமையாக சரிந்ததற்கு முக்கிய காரணம் ஆகும்.

எச்டிஎப்சி வங்கியின் 3-ஆம் காலாண்டு முடிவு வெளியானது. இதில் நிகர லாபம்33% அதிகரித்த போதிலும், கடன் மற்றும் வைப் புத் தொகை விகிதாச்சாரம் சரிந்துள்ளது. இதுதவிர, பங்குச் சந்தைபுதிய உச்சத்தை எட்டிய தால், லாபத்தைஎடுப்பதற்காக முதலீட்டாளர்கள் பங்குகளை அதிக அளவில் விற்றதும் சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *