இலங்கைக் கடற்படையினர் மீண்டும் அட்டூழியம் தமிழ்நாடு மீனவர்கள் 27 பேர் சிறைபிடிப்பு

1 Min Read

அரசியல்

இராமேசுவரம்,அக்.16-தமிழ்நாடு மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதைக் கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (16.10.2023) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

ராமேசுவரம் துறைமுகத்தில் 15.10.2023 அன்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

தலைமன்னார் அருகே கென்னடி, பாஸ்கர் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப் படகுகளில் 15 பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி 2 விசைப் படகுகளையும், 15 மீனவர்களை யும் சிறை பிடித்தனர்.

அதேபோல, கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சி மடத்தைச் சேர்ந்த சர்புதீன்,லிட்டன், மண்டபத்தைச் சேர்ந்தமரிய வாசிங் டன் ஆகியோருக்குச் சொந்தமான 3 விசைப் படகுகளையும், அதிலிருந்த 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர்.

தலைமன்னார் கடல் பகுதியில் கைது செய்யப்பட்ட 15 மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டு, வவுனியா சிறையில் அடைக்கப் பட்டனர்.

கச்சத்தீவு அருகே கைது செய்யப் பட்ட 12 மீனவர்கள் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப் பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளம் அருகில் மீனவர்களின் அவசர ஆலோ சனைக் கூட்டம் நேற்று (15.10.2023) நடைபெற்றது.

மீனவப் பிரதிநிதி என்.ஜே.போஸ் தலைமை வகித்தார். கைது செய்யப் பட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடு விக்க வலியுறுத்தி இன்று முதல் (16.10.2023) தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவது என்று அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.

மேலும்,வரும் 18ஆம் தேதி பாம்பன் பாலத்தில் மறியல் போராட்டம் நடத்தவும் மீனவர்கள் தீர்மானித் துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *