“புகை இல்லா போகி” கொண்டாடுவீர்! மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்

2 Min Read

சென்னை. ஜன. 13- அடர் புகையை வெளியிடும் பொருட் களை எரிக்காமல் புகையில்லா போகியை பொதுமக்கள் கொண் டாட வேண்டும் என்று மாசுக் கட் டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொங்கல் நாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகு தலும் என்ற அடிப்படையில் நமது முன்னோர்கள் போகியை கொண் டாடி வந்துள்ளனர். அதன்படி, இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட் களை தீயிட்டுக் கொளுத்தி வந் துள்ளனர்.
இச்செய்கையால் காற்று மாசு படாமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப் பில்லாமல் இருந்து வந்துள்ளது.
ஆனால், இன்றைய கால கட் டத்தில் போகியின்போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக் கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர்மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு, போகியன்று எரிக்கப்படும் பொருட்களால் ஏற் படும் அடர்ந்த புகை காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப் பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது.

சென்னை நகரில் போகியன்று எரிக்கப்படும் மேற்படி பொருட் களால் ஏற்படும் அடர் புகையால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாகஉள்ளது.
மேலும், அடர் நச்சு வாயுக்க ளால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல்போன்ற பாதிப்புகளும் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் கடந்த 19 ஆண்டுகளாக போகிக்கு முன் பொதுமக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப் புணர்வு பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதன் காரணமாக கடந்த ஆண் டுகளில் அடர் புகையை ஏற்படுத் தும் பொருட்களை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது. இந்த ஆண்டும் பொதுமக்கள் புகையில்லா போகியைக் கொண் டாட வேண்டும். போகியின்போது சென்னையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், போகிக்கு முந்தைய நாள் மற்றும் போகி நாளன்று 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்றுதரத்தை கண் காணிக்க ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.
அதன் விவரங்கள் இணைய தளத்தில் வெளியிடப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *