காசா,ஜன.11- காசா வில் படுகொலை செய்யப் பட்ட அய்.நா. ஊழியர் களின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்தது.
பாலஸ்தீன அகதிகளுக் கான அய்.நா. நிவாரண மற்றும் பணி நிறுவன தகவல்படி பள்ளிகள் உள்பட அய்நாவின் 130 பாதுகாப்பிடங்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது.
மேலும் 1945ஆம் ஆண்டு இவ்வமைப்பு துவங்கப்பட்டதிலிருந்து எந்தவொரு போரிலும் அய்.நா ஊழியர்கள் இது போன்ற ஒரு மிகப்பெரிய உயிரிழப்பை சந்தித்த தில்லை எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.
அய்.நா. ஊழியர்கள் 142 பேர் கொலை

Leave a Comment