வெற்றிப்பாதையில் ‘இந்தியா’ கூட்டணி இடைத்தேர்தலில் பி.ஜே.பி.க்கு மரண அடி காங்கிரஸ் பெரு வெற்றி

1 Min Read

ஜெய்ப்பூர்,ஜன.10- ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த கடந்த ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி ஒரே கட்ட மாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. மொத்தம் 200 தொகுதிகளை கொண்ட மாநி லத்தில், கரன்பூர் தொகுதி வேட் பாளர் குர்மீத் சிங் கூனரின் மறைவை அடுத்து 199 தொகுதிக ளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்தது.

அதில் பதிவான வாக்குகள் கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறி விக்கப்பட்டன. அதில், பா.ஜ.க. 115 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 69 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து, அம்மாநில முத லமைச்சராக பஜன்லால் சர்மா பொறுப்பேற்றார்.

இந்நிலையில், நவம்பர் 25ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடை பெறாத கரன்பூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. காங் கிரஸ் சார்பில் ருபிந்தர் சிங் கூன ரும், பாஜக சார்பில் அமைச்சர் சுரேந்தர் பால் சிங்கும் களம் கண்டனர். காங்கிரஸ் வேட்பாளர் ருபிந்தர் சிங் கூனர், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் குர்மீத் சிங் கூனரின் மகன் ஆவார். குர்மீத் சிங் கூனரின் மறைவையடுத்தே, கரன் பூர் சட்ட மன்றத் தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு கடந்த 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடை பெற்றது. அதில், 81.38 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக் கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, கரன் பூர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (8.1.2024) எண் ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் பட்டன. இதில் பதிவான வாக்குக ளில் ருபிந்தர் சிங் கூனருக்கு 94,950 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. அமைச்சர் சுரேந்தர் பால் சிங்கிற்கு 83,667 வாக்குகளும் கிடைத்துள்ளன. இதன் மூலம் 11,283 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக அமைச்சர் சுரேந்தர் பால் சிங்கை, காங்கிரஸ் வேட்பாளர் ருபிந்தர் சிங் கூனர் தோற்கடித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *