இதுதான் உ.பி. பி.ஜே.பி. ஆட்சியின் லட்சணம் ரூ. 30 லட்சத்துடன் ஏடிஎம் எந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

1 Min Read

ஆக்ரா,ஜன.10- உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத சில நபர் கள், சுமார் 30 லட்சம் ரூபாய் பணம் இருந்த எஸ்பிஅய் வங்கி யின் ஏடிஎம் இயந்திரத்தை திருடிச் சென்றுள்ளனர்.

ககரோல் பேருந்து நிலையம் அருகில் எஸ்பிஅய் வங்கியின் ஏடிஎம் மய்யம் உள்ளது. 8.1.2024 அன்று அதிகாலை 2.45 மணியள வில் சிலர் இந்த ஏடிஎம் மய்யத்திலிருந்து ஏடிஎம் இயந்திரத்தை திருடிச் சென்றுள்ளனர்.

ஏடிஎம்மில் இருந்து திடீரென சத்தம் கேட்டதும் சம்பந்தபட்ட வங்கி கிளை இருக்கும் வீட்டின் உரிமையாளர் அக்கம் பக்கத்தி னரை உதவிக்கு அழைத்துள்ளார்.
அவர் கூச்சலிடவும், திருடர்கள் ஏடிஎம் இயந்திரத்தை தூக்கிக் கொண்டு வேனில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து வங்கி கிளை மேலாளர் அளித்த புகாரின் அடிப் படையில் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய் துள்ளனர். ஏடிஎம்மில் சுமார் 30 லட்சம் ரூபாய் பணம் இருந்ததாக வங்கி கிளை மேலாளர் தெரிவித்துள் ளார். குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப் படைகள் அமைக்கப்பட் டுள்ளதாகவும் சிசிடிவி காட்சி களை ஆய்வு செய்து வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள் ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *