கழக நூல்கள் பரப்பும் பணி

viduthalai
1 Min Read

குமரி மாவட்ட கழகம் சார்பாக குமரி மாவட்டம் முழுமையாக கழக நூல்களை மக்களிடம் பரப்பும் பணியில் கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், கழக மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் மற்றும் தோழர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

தந்தை பெரியாருடைய நூல்கள், திராவிடர்கழக தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களுடைய நூல்களை பொது மக்கள் ஆர்வமுடன் படித்து வருகின்றனர். இந்த பரப்புரை நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் உ. சிவ தாணு, குமரிமாவட்ட திராவிடர்கழக காப்பாளர் ஞா.பிரான் சிஸ், இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், இளை ஞர் அணி தலைவர் இரா.இராஜேஷ் தோழர்கள் ஞானவேல், பாலகிருஷ்னன், கோட்டாறு முத்து மற்றும் பலர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *