பீகாருக்கு சிறப்புத் தகுதி கோரி அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்

1 Min Read

பாட்னா, நவ. 24 – மாநிலத்துக்கு சிறப்புத் தகுதி அளிக்க ஒன்றிய அரசை வலியுறுத்தும் வகையில், பீகார் அமைச் சரவை கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

பீகாரில் முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், பீகாருக்கு சிறப்புத் தகுதி வழங்கும்படி ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சமூக வலைதளத்தில் வெளியிட் டுள்ள பதிவில், நிதீஷ் குமார் கூறியுள்ளதாவது:மாநிலத்தில் சமீபத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் படி, எஸ்.சி., – எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்த வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை, 50 சத வீதத்தில் இருந்து, 65 சதவீதமாக உயர்த்த முடிவு செய் யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், மாநிலத்தின் நலனைக் கருதி, ஏழை மக்களின் நலன் கருதி, பீகாருக்கு சிறப்புத் தகுதியை ஒன்றிய அரசு அளித்தால், இந்த திட்டங்களை குறுகிய காலத்தில் நிறைவேற்ற முடியும்.பீகாருக்கு சிறப்புத் தகுதி கேட்டு, 2010இல் இருந்து நான் போராடி வருகிறேன்.

இது தொடர்பாக, ரிசர்வ் வங்கியின் மேனாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில், ஒரு குழுவை ஒன்றிய அரசு அமைத்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.பீகார் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்து வதற்காக, மாநிலத்துக்கு சிறப்புத் தகுதியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *