கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் முடிவு

1 Min Read

காரைக்குடி, ஜன.8- காரைக்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் சு. முழுமதி தலைமையில், ப.க. மாநில அமைப்பாளர் ஒ .முத்துக்குமார், ப.க துணைப் பொதுச் செயலாளர் முனைவர் மு.சு.கண்மணி முன்னிலை யில் நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட கழக காப்பாளர் சாமி திராவிடமணி, மாவட்ட கழக தலைவர் ம.கு.வைகறை, மாவட்டச் செயலாளர் சி.செல்வமணி, மாவட்ட கழக துணைத் தலைவர் கொ.மணி வண்ணன், நகர கழக தலைவர் ந.ஜெகதீசன், தி.தொ.க செயலாளர் சொ.சேகர், சிவகங்கை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கணேசன், ப.க தோழர் நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர். கூட் டத்தில், தந்தை பெரியாரின் 50 ஆவது நினைவு ஆண்டினை முன் னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை சிறப்பாக நடத்துவதெனவும், பகுத்தறிவாளர் கழகத்தில் உறுப்பினர் சேர்க் கையை விரைந்து செயல்படுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *