இந்தியா கூட்டணி தலைவர் 15 நாட்களில் தேர்வு காங்கிரஸ் தலைவர் கார்கே தகவல்

1 Min Read

புதுடில்லி, ஜன.7 டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை யகத்தில் நேற்று (6.1.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில், ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள நடைப் பயணத் திற்கான இலச் சினை மற்றும் முழக்கத்தை கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார்.

பின்னர் எதிர்க்கட்சி களின் இண்டியா கூட்டணியின் ஒருங் கிணைப்பாளராக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப் பினார்.

அதற்கு கார்கே கூறும்போது, “இந்தக் கேள்வி உங்களில் யார் பெரும் பணக்காரர் (கவுன் பனேகா குரோர்பதி) என்பது போல் உள் ளது. அடுத்த 10 முதல் 15 நாட் களில் இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அப் போது இதுகுறித்து முடிவு செய்யப்படும். அதுபற்றி கவ லைப்படாதீர்கள்” என்றார்.
அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராக நிதிஷ் குமார் மீண்டும் பொறுப்பேற்றார். இந்நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பிரத மர் வேட்பாளர் பொறுப்புக்கு பொருத் தமானவர் என அய்க்கிய ஜனதா தள மூத்த தலைவர் கே.சி.தியாகி கூறியிருந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *