இங்கு மோடி மஸ்தான் வேலை பலிக்காது: அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை, ஜன. 6- புதுக் கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாள ருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடை பெற்றது.
பொன்னமராவதி தெற்கு வடக்கு ஒன்றியம் மற்றும் நகர திமுக சார் பில் நடைபெற்ற விழா வில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, “மூன்று நாட்களுக்கு முன்பு திருச்சியில் பன் னாட்டு விமான நிலை யத்தில் விமான முனையம் திறப்பு விழா நிகழ்ச்சி பிர தமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அது ஒன்றிய அரசின் நிகழ்ச்சி, இதனை உணர்ந்தவர் அறிந் தவர் தமிழ்நாட்டின் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின். இது ஒன்றிய அரசு நிகழ்ச்சி என்பதால் சற்று அடக்கித்தான் வாசிக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் தான் நிகழ்ச் சியை கையில் எடுத்து செய்கின்றார்கள். அந்த நிகழ்ச்சியில் ஒரு சிலர் முழக்கங்கள் எழுப்பிய தாக சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை அதுதான். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கலந்து கொண்டவர்க ளின் எண்ணிக்கை அது தான். இதைவிட சிறிய கட்சி தமிழ்நாட்டில் இருக்க முடியாது. அவர் கள் ஏதாவது கத்தி விட் டுப் போக வேண்டும் என்பதற்காக அதை அப் படியே விட்டு விட்டோம், தவிர அடக்கி வாசிக்க வேண்டும் என்பதற்காகத் தான். ஏனென்றால் அழைப்பிதழ்கள், அனு மதி சீட்டு அவர்களுடை யது. அங்கே நடைபெற்ற விழாவில் திமுகவைச் சேர்ந்தவர்கள் தடுத்து வெளியே நிறுத்தப்பட் டார்கள். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த பாஜக உறுப்பினர்களின் எண் ணிக்கை அதுதான் என்று கூறிமொத்த உறுப்பினர் களையும் ஓரிடத்தில் சேர்த்து வைத்த வெட்கக் கேடான விடயம் வேறு என்ன இருக்க முடி யும்?
திமுக என்ற மாபெ ரும் சக்தியை எதிர்த்து நிற்பதற்கு தமிழ்நாட்டில் எந்த சக்தியும் எந்த திரா ணியும் யாருக்கும் இல்லை. வைப்புத் தொகை வாங்க முடியாத கட்சிகளுக்கு எல்லாம் நாங்கள் கவ லைப்படுவது கிடையாது. அவர்கள் கத்தி கூச்சல் போடுவது பற்றியும் எங் களுக்கு கவலை கிடை யாது. தமிழ்நாட்டிற்கு அள்ளி அள்ளி தருவதாக பிரதமர் மோடி கூறு கிறார். தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நான்கு வழி சாலை போட்டது திமுகவில் அங்கம் வகித்த அய்க்கிய முற்போக்கு கூட்டணி. இந்த சாலை வசதி ஏற்ப டுத்தபடாவிட்டால் போக்குவரத்து வசதி முன்னேறி இருக்காது. விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம் பெட் ரோல் டீசல் விலை உயர்வு தான். கச்சா எண் ணையின் விலை குறைந் தாலும் டீசல்,பெட்ரோல் விலை குறையவில்லை. பெட்ரோல் ,டீசல் விலை யில் பாஜக அரசு பகல் கொள்ளை அடிக்கிறது.
மக்களை ஏமாற்றும் மோடி மஸ்தான் வேலையை தற்போது ஒன்றிய அரசு செய்து வரு கிறது. இது தமிழ் நாட் டில் எடுபடாது. வரு கின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 சீட்டு களை திமுக கூட்டணி பெறும். இதனை யாரா லும் தடுக்க முடியாது. இங்கு எடப்பாடியும் ஒன்றும் செய்ய முடியாது, அண்ணாமலையும் ஒன்றும் செய்ய முடியாது. உத்திரபிரதேசத்தில் வேண்டுமானால் பாஜக மக்களை ஏமாற்றலாம். அங்கேயும் மக்களிடம் நாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். இந் தியா என்பது இந்தியா கூட்டணி மட்டும் தான் என்பதை உருவாக்குவோம். பாரதமும் இந்தியாவும் ஒன்றுதான்.
இந்தியா என்ற வார்த் தையே எதிர் கூட்டணிக்கு வேப் பங் காயாக கசக்கி றது. இங்கே இருக்கின்ற அனைவரும் சகோதரர் களாக வாழ வேண்டும்” என்றார்.