சென்னை. ஜன. 6- கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங் கள் போன்ற வானியல் நிகழ்வுகளை ஆய்வு செய் வதற்காக எக்ஸ்போசாட் எனும் செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத் தது. இது பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி பூமியில் இருந்து சுமார் 650 கி.மீ. உயரம்கொண்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இதன் மூலம் கருந்துளை, நியூட் ரான் விண்மீன்களில் இருந்து வெளியாகும் கதிரியக்கம், விண்மீன் வெடிப்பு உள்ளிட்ட பல் வேறு அம்சங்கள் குறித்து 5 ஆண்டுகளுக்கு ஆய்வு செய்யப்பட உள்ளது.
இதுதவிர பிஎஸ் எல்வி ராக்கெட்டின் இறு திப் பகுதியான பிஎஸ் 4 இயந்திரத்தில் போயம் (POEM-PSLV Orbital Experimental Module) எனும் பரிசோதனையும் வெற்றிகரமாக மேற் கொள்ளப்பட்டது. அதா வது, செயற்கைக்கோளை நிலைநிறுத்திய பின்னர் பிஎஸ்-4 இயந்திரத்தின் உயரமானது 350 கி.மீட் டருக்கு கீழே கொண்டு வரப்பட்டு பரிசோதனை முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. இதற்காக அந்த இயந்தி ரத்தில் இந்திய ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங் கள் தயாரித்த 10 ஆய்வுக் கருவிகள் வைக்கப்பட்டு உள்ளன. அவ்வாறு பிஎஸ் 4 இயந்திரத்தில் இருந்த எப்சிபிஎஸ் (Fuel cell Power System-FCPS) கருவி மூலம் மின்சார தயாரிப்பு சோதனை தற்போது வெற்றிகரமாக மேற்கொள்ளப் பட்டுள் ளதாக இஸ்ரோ அறிவித் துள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் கூறும்போது, ‘‘பிஎஸ் 4 இயந்திரத்தில் இருந்த ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயுவை கொண்டு, ஃப்யூல் செல் கருவி மூலம் 180 வாட்ஸ் அளவுக்கு மின்னாற்றல் உற்பத்தி சோதனை செய் யப்பட்டுள்ளது. இத்த கைய மின்னாற்றல் உற் பத்தியால் விண்ணில் மாசு ஏற்படாது. இந்த சோதனை எதிர்காலத் தில் சூரியஒளியின்றி விண் வெளியில் மின்னாற்றல் தேவையை பெற முடியும் என்பதை உறுதிபடுத்தி யுள்ளது. மேலும், இதன் மூலம் மனிதர்களை விண் ணுக்கு அனுப்பும்போது தண்ணீர்மற்றும் மின் னாற்றல் தேவைகளையும் இத்தகைய வழிகளில் நாம் பூர்த்தி செய்து கொள்ள லாம்’’ என்றனர்.
அமெரிக்கா, அய் ரோப்பா உள்ளிட்ட நாடு கள் ஏற்கெனவே விண் வெளியில் மின்சாரம் உற் பத்தி செய்துள் ளன.அந்த வரிசையில் இந்தியாவும் தற்போது சேர்ந்து புதிய சாத னையை படைத்துள் ளது. இதற்கு காரணமான ஃப்யூல் செல் கருவியானது திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மய் யத்தால் தயாரிக்கப்பட் டது குறிப்பிடத்தக்கது.