உட்கட்சிப் பிரச்சினைகளை வெளியே பேசாதீர்!

2 Min Read

காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவுரை

புதுடில்லி, ஜன.6- நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு ஒற்றுமையாக பாடுபடுங்கள். உள்கட்சி பிரச் சினைகளை வெளியே பேச வேண் டாம். ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மல்லிகார் ஜூன கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

10 ஆண்டுகால தோல்வி
டில்லியில், நாடு முழுவதுமி ருந்து வந்திருந்த காங்கிரஸ் நிர் வாகிகள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில், கட்சி தலைவர் மல் லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார். அதில் அவர் பேசிய தாவது:-
பாரதிய ஜனதா தனது அரசின் 10 ஆண்டு கால தோல்விகளை மூடி மறைப்பதற்காக உணர்வுப் பூர்வமான பிரச்சினைகளை எழுப்பி வருகிறது. ஒவ்வொரு பிரச்சினையி லும் திட்டமிட்டு காங்கிரசை சம்பந்தப் படுத்துகிறது.
நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பா.ஜனதாவின் பொய் கள், வஞ்சகம், தவறான செயல் பாடுகள் ஆகியவற்றுக்கு மக்கள் முன்னிலையில் உரிய பதிலடி கொடுக்க வேண்டும்.

கருத்து வேறுபாடுகள்
பாரத ஒற்றுமைப் பயணம் மேற்கொண்ட ராகுல்காந்திக்கு பாராட்டுகள். அவர் புதிதாக மேற் கொள்ளும் ‘பாரத நீதிப் பயணம்’ சமூக நீதி பிரச்சினையை தேசிய விவாத பொருளாக மாற்றும்.
காங்கிரசார் தங்களுக்கிடையி லான கருத்து வேறுபாடுகளை ஒதுக்கித் தள்ள வேண்டும். உள் கட்சி பிரச்சினைகளை வெளியே பேச வேண்டாம். ஊடகங்களில் தெரிவிக்கக்கூடாது.
நாடாளுமன்ற தேர்தலில் காங் கிரசின் வெற்றியை உறுதிசெய்ய ஒற்றுமையுடன் பாடுபட வேண் டும். வெற்றிக்காக ஒரே குழுவாக செயல்பட வேண்டும்.
-இவ்வாறு அவர் பேசினார்.

மோடி அரசு கொள்ளை
இதற்கிடையே, மல்லிகார் ஜூன கார்கே தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 19 மாதங் களில் 31 சதவீதம் குறைந்துள்ளது.ஆனால், பெட்ரோல், டீசல் விலையை மோடி அரசு குறைக்க வில்லை. பெட்ரோல், டீசல் விலை குறைப்பது தொடர்பாக பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை எதுவும் நடக்க வில்லை என்று மோடி அரசின் அமைச்சர்கள் கூறுகிறார்கள்.
பெட்ரோல், டீசல் விற்பனை யில் மோடி அரசின் கொள்ளைக்கு கட்டுப்பாடே இல்லை. பெட் ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.8 முதல் ரூ.10 வரையும், டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.4 வரையும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கின்றன.
-இவ்வாறு மல்லிகார் ஜூன கார்கே கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *