பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் அதிர்ச்சி ரூ.40,000க்கு போலி பட்டங்கள் விற்பனை!

1 Min Read

அரசியல், இந்தியா

லக்னோ,அக்.19 – உத்தரப் பிரதேச மாநிலம் சாப்ராவைச் சேர்ந்த விஷ்ணுபிர சாத் சவுபே மற்றும் பீகா ரின் அரா வைச் சேர்ந்த ரவிகாந்த் திவாரி ஆகிய  இருவரின் கல்வி சார்ந்த பட்டங்கள் சந்தேகத்திற் குட்பட்டது என கண்டு பிடிக்கப்பட்டது. 

விசாரணையில் இரு வரது பட்டமும் பாஜக ஆளும் உத்த ரப்பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட் டத்தில் உள்ள பூர்வாஞ்சல் பல்கலைக் கழகத்தில் இருந்து பெறப்பட்டது என தெரியவர, சம்பந்தப்பட்ட பல்க லைக்கழகத்திற்கு ஆதா ரத்துடன் புகார் அனுப்பப்பட்டது. பல்கலைக்கழக நிர்வாக குழுவின் விசாரணையில் சந்தோஷ் திவாரி,  அனில் சிங் என்ற 2 பல்கலைக்கழக ஊழியர்கள் தரகர் மூலம் போலி பட்டங்களைத் தயார் செய்து விற்பனை செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

விஷ்ணு பிரசாத் சவுபே, ரவிகாந்த் திவாரி ஆகியோரிடம்  பி.எட் மற்றும் பி.பார்ம் போலி  பட்டங்களை 40,000 முதல் 50,000 ரூபாய்க்கு பல்கலைக்கழக ஊழியர் கள்  விற்றுள்ளனர். இந்த விவகாரம் குறித்து  சராய் குவாஜா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டது. 

மேலும் இந்த விவகாரத்தை விசாரிக்க பூர் வாஞ்சல் பல்கலைக்கழக நிர்வாகம் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ள நிலையில், உத்தரப்பிர தேசத்தில் போலி பட்டம் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடுமுழுவதும் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *