கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

4.1.2024

டெக்கான் கிரானிக்கல்,சென்னை
♦சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் திட்டத்தை மோடி அரசு கைவிட்டது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்
♦ பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வன்முறை வழக்கில் குற்றவாளிகளை பா.ஜ.க. ஆதரிக்கிறது என கருநாடக முதலமைச்சர் சித்தாராமைய்யா குற்றச்சாட்டு.
♦ குடியுரிமைக்கு மதம் அடிப்படையாக இருக்க முடியாது என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரி காட்டம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
♦ இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை வழக்கை அடுத்த வாரம் அய்.நா. உயர் நீதிமன்றம் விசாரிக்கிறது

தி இந்து
♦ அதானி குழும மோசடி விவகாரம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவையில்லை; 3 மாதத்தில் விசாரணையை முடிக்க செபிக்கு உத்தரவு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதானிக்கு வழங்கப்படும் சலுகை என்பதாக காங்கிரஸ் விமர்சனம்.
♦ குடியுரிமை திருத்தச் சட்டம் அரசமைப்புக்கு எதிரானது என ஏஅய்எம்அய்எம் தலைவர் அசாதுதீன் ஓவைசி கண்டனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா
♦ கருநாடகாவில் ‘கோத்ரா போன்ற சம்பவம்’ நடைபெறலாம் என காங்கிரஸ் தலைவர் பி.கே.ஹரிபிரசாத் எச்சரிக்கை!

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *