திருப்பத்தூர் மாவட்டம் தாமலேரிமுத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே 29.12.2023 அன்று தந்தை பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. நகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் குமரவேல் ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் பெ. கலைவாணன் மற்றும் மாவட்ட விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் எம்.என்.அன் பழகன் ஆகியோர் பங்கேற்று தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளையும், அவரின் வாழ்க்கை வரலாறுகளையும் மாணவர்களிடையே விளக்கி, ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை அனைத்து நிலைகளிலும் எழுப்புங்கள் என்று சிறப்புரையாற்றினார்கள்.