பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

0 Min Read

திருப்பத்தூர் மாவட்டம் தாமலேரிமுத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே 29.12.2023 அன்று தந்தை பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. நகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் குமரவேல் ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் பெ. கலைவாணன் மற்றும் மாவட்ட விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் எம்.என்.அன் பழகன் ஆகியோர் பங்கேற்று தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளையும், அவரின் வாழ்க்கை வரலாறுகளையும் மாணவர்களிடையே விளக்கி, ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை அனைத்து நிலைகளிலும் எழுப்புங்கள் என்று சிறப்புரையாற்றினார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *