கீழவாளாடி, ஜன. 3- லால்குடி கழக மாவட்ட இளைஞர் அணி சந்திப்புக் கூட்டம் 31.12.2023 அன்று மாலை கீழவாளாடியில் நடை பெற்றது.
இதில் வீ.அன்பு ராஜா தலைமையில் லால்குடி மகளிர் பாசறை தலைவர் மு.செல்வி ஆகி யோர் முன்னிலையில் பிரவீன், கிசான் பவுல் சிங் மற்றும் பிரிட்டோ ஆகி யோர் திராவிடர் கழகத் தில் இணைந்தனர். அவர் களுக்கு கழகம் சார்பில் வரவேற்பும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மும்முடிச் சோழமங்கலம் யுவராஜ், ரஞ்சித், சிறீராம், அரவிந்த் மற்றும் பிரிதிவிராஜ் ஆகி யோர் கலந்து கொண்ட னர்.
இந்த கூட்டத்தில் பொக்கட்டக்குடி, மும் முடிச்சோழமங்கலம், நொச்சியம், பள்ளிவாயல், மணக்கால், இடையாற்று மங்கலம், சூசையபுரம், நொச்சியம் மற்றும் இதர ஊர்களில் திராவிடர் கழக இளைஞர் அணி கிளைகள் அமைப்பது, கழக கொள்கைகள் பிரச் சாரம் மேற்கொள்வது, கல்விமேம்பாடு, போதை பொருள் மறுப்பு பரப் புரை, விளையாட்டு, வேலைவாய்ப்பு, பொது தொண்டுகள், மரம் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளுதல் என்று முடிவு எடுக்கப்பட்டது.
புதிதாக இணைத்துக்கொண்ட இளைஞர்களுக்கு வரவேற்பு-பாராட்டு

Leave a Comment