பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பிஜேபி ஆளும் உ.பி.க்கு முதலிடம்

1 Min Read

புதுடில்லி, ஜன.3- ஒன்றியத்தில் பாஜக அரசு அமைந்தது முதல் பாலின பேதமின்றி சமத்துவ சமூக நீதி பெரிதும் கேள்விக்குரியதாகி வருகிறது.

மனுதர்மம், ஸநாதனம், இந்துத்துவா என்றெல்லாம் கூறிக்கொண்டு ஒன்றியத்தில் ஆளுகின்ற பாஜக அரசிலும், பாஜக ஆட்சி உள்ள மாநிலங்களிலும் பெண்ணடிமைத்தனம், பெண்கள்மீதான வன்கொடுமைகள் பெருகி வருகின்றன. அண்மையில் வெளியான ஆய்வுத்தகவலின்படி, நாடு முழுவதும் 2023-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 28,811 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 55 சதவீதம் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் விடுத் துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டி ருப்பதாவது:-

குடும்ப வன்முறை, பெண்களை கண்ணி யக்குறைவாக நடத்துதல், வரதட்சணை, பாலியல் வன்கொடுமை, பாலியல் வல்லுறவு தொடர்பாக நாடு முழுவதும் 28,811 புகார்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. குடும்ப வன்முறை தொடர்பாக 6,274, பெண்களை கண்ணி யக்குறைவாக நடத்துதல் தொடர்பாக 8,540, வரதட்சணை துன்புறுத்தல் புகார்கள் 4,797, பாலியல் வன்கொடுமை புகார்கள் 2,349, பெண்களுக்கு எதிரான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை மெத்தனம் தொடர்பாக புகார்கள் 1,618, பாலியல் வல்லுறவு தொடர்பாக 1,537, பாலியல்

துன்புறுத்தல் தொடர்பாக 805, சைபர் குற்றங்கள் 605, பெண்களை பின்தொடர்தல் தொடர்பாக 472 கவுரவ குற்றங்கள் தொடர்பாக 409 புகார்கள் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 16,109 புகார்கள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து டில்லியில் 2,411, மகாராட்டிராவில் 1,343 புகார்கள் பதிவாகியுள்ளன. பீகாரில் 1,312, மத்தியப்பிரதேசம் 1,165, அரியானாவில் 1,115, இராஜஸ்தான் 1,011, தமிழ்நாடு 608, மேற்கு வங்கம் 569, கருநாடகா 501 என்ற அளவில் புகார்கள் பதிவாகியுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *