திருச்சியில் நேற்று (2.1.2024) நடைபெற்ற விமான நிலைய புதிய பன்னாட்டு முனையம் திறப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் உரையாற்றத் தொடங்கும் போது மோடி மோடி என்று கூச்சலிட்டனர். வெள்ள நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை வைத்த போதும் பிஜேபியினர் மோடி வாழ்க என்றும் ஜெய்சிறீ ராம் என்றும் முழக்க மிட்டனர். இதுதான் பிஜேபி கடைப் பிடிக்கும் அரசியல் நாகரீகம் என்று பொது மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு பிஜேபினர் நடந்து கொண்டது மிகப்பெரிய அவலம்.