கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

2.1.2024
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* வெளி மாநிலங்களில் வழக்குரைஞர்களாக பணியாற்று வோர் மாவட்ட நீதிபதி பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது, தெலங்கானா உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
* ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஆதார் கார்டு அவசியம் என்ற ஒன்றிய அரசின் ஆணை, ஏழை மக்கள் மீதான மோடி அரசின் புத்தாண்டு கொடூர தாக்குதல் பரிசு என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* சட்டப்பிரிவு 370, ஓரினச்சேர்க்கைத் திருமணம் தொடர்பான தீர்ப்புகள் மீதான விமர்சனங்களுக்கு பதில ளிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் மறுப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* இந்திய தண்டனை சட்டங்களுக்கு பதிலாக புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் .
தி இந்து:
* தேர்தலுக்கு முன்னதாக ராகுல் காந்தியின் பாரத் நியாய நடைப்பயணம் முக்கியமான ஹிந்தியின் மய்யப் பகுதியான உத்தரப்பிரதேசத்தில் கவனம் செலுத்தும்.
தி டெலிகிராப்:
* மீண்டும் மணிப்பூரில் வன்முறை: தவுபாலில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர், பள்ளத்தாக்கு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டது
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *