திருச்சியில் பிரதமர் திறக்கும் விடுதி உயர் ஜாதி மாணவர்களுக்கு மட்டும் தானா?

2 Min Read

சென்னை, ஜன.2 திருச்சியில் பிரதமர் மோடி இன்று (2.1.2024) தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்அய்டி) “அமெதிஸ்ட்” என்ற விடுதி 10% இடஒதுக்கீட்டால் பயன டைந்த மாணவர்களுக்கு மட்டும் தானா? என ஒன்றிய அரசின் செய்திக் குறிப்பால் சர்ச்சை வெடித்துள்ளது. பிரதமர் மோடி திருச்சி என்அய்டியில் இன்று திறந்து வைக்கும் விடுதி குறித்து ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கை

கல்வி உள்கட்டமைப்பு வசதி களை சிறப்பாக மாற்றி அமைக்கும் முக்கிய நிகழ்ச்சியாக, பிரதமர் நரேந்திர மோடி, 2024 ஜனவரி 2-ஆம் தேதி திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என் அய்டி) “அமெதிஸ்ட்” என்ற விடு தியைத் திறந்து வைக்கிறார். 2019_2020ஆ-ம் கல்வியாண்டு முதல் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல் படுத்தியதன் காரணமாக அதிகரித்த மாணவர்களின் எண்ணிக்கைக்கு இடமளிக்கும் வகையில் இந்த விடுதி அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 41 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விடுதி ஒன்றிய அரசால் முழு மையாக நிதியளிக்கப்பட்டதாகும். நவீனத்துவம் மற்றும் கல்விச் சிறப் பின் கலங்கரை விளக்கமாக இது திகழ்கிறது. என்.அய்.ஆர்.எஃப்-பின் “இந்திய தரவரிசை – 2023”-இன் படி, பொறியியல் கல்வித் துறையில் சிறந்த முன்னோடியாக அனைத்து என் அய்டி-களிலும் திருச்சிராப்பள்ளி என்அய்டி தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக மதிப்புமிக்க முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும், நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பொறியியல் கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை இது 9ஆ-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2023-_2024ஆம் கல்வியாண்டில் வைர விழா ஆண்டைத் தொடங்கவுள்ள இந்நிறுவனத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியால் “அமெதிஸ்ட்” விடுதி திறக்கப்படுவது ஒரு சிறந்த மைல்கல்லாக அமைகிறது. 1.2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 253 அறை களுடன் 506 மாணவர்கள் தங்கும் வகையிலும், எஃப்.டி.டி.எச் தொழில் நுட்பத்துடன், வைஃபை வசதியுடன் இந்த விடுதி அமைக்கப் பட்டுள்ளது. இந்த விடுதி நான்கு மாடிகளைக் கொண்டதாகும். “அமெதிஸ்ட்” விடுதி திறக்கப்படும் நிலையில், இது மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உகந்த சூழலை வழங்குவதில் திருச்சிராப் பள்ளி என்அய்டி-யின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது. பொறியியல் கல்வித் துறையில் புதிய மைல்கற்களை இந்த நிறுவனம் படைக்கத் தயாராக உள்ளது.

இவ்வாறு ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் அறிக்கையில், என்அய்டி விடுதி திறப்பு விழா என்று மட்டும் குறிப் பிடாமல் “2019_2020ஆ-ம் கல்வி யாண்டு முதல் 10 சதவீத இடஒதுக் கீட்டை அமல்படுத்தியதன் காரண மாக அதிகரித்த மாணவர்களின் எண்ணிக்கைக்கு இடமளிக்கும் வகை யில் இந்த விடுதி அமைக்கப்பட்டுள் ளது” என தெளிவாகவே குறிப்பிடப் பட்டிருப்பது 10% இடஒதுக்கீட்டால் பயனடைந்த மாணவர்களுக்கான விடுதியா? என்கிற கேள்வியையும் எழுப்பி சர்ச்சையாக வெடித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *