ராமன் கோவில் திறப்பு என்பது தேர்தல் டிராமா மட்டுமே! 60 விழுக்காடு கட்டடப் பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது

2 Min Read

பைசாபாத், ஜன.2 ராமன் கோவில் திறப்பு விழா அன்று பொதுமக்கள் யாரும் அயோத்திக்கு வர வேண்டாம் எனப் பிரத மர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்து மத வழிபாட்டு தலமான ராமன் கோவில் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப் பட்டுள்ளது. இந்த ராமன் கோவில் வரும் 22ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. ராமன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக, அயோத் தியில் புதிய விமான நிலை யம் கட்டப்பட்டுள்ளது, மேலும் அயோத்தி ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அயோத்தி சென்று அயோத்தி விமான நிலை யம் மற்றும் புதுப்பிக்கப் பட்ட ரயில் நிலையத்தைத் திறந்து வைத்தார்.

உத்தரப்பிரதேச மாநி லத்திற்கு 15 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பி லான வளர்ச்சித் திட்டங் களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி, ”ஒட்டு மொத்த உலகமும் வரும் 22 ஆம் தேதி அயோத் தியில் நடைபெற உள்ள வர லாற்றுச் சிறப்புமிக்க பிரதிஷ்டை (ராமன் சிலை நிறு வுதல்) நிகழ்ச்சிக்காக காத் திருக்கிறது. இதன் மூலம் நமது பாரம்பரியம், வளர்ச் சியின் வலிமை முன்னோக் கிச் செல்ல உள்ளது. பொதுமக்கள். வரும் 22ஆம் தேதி அயோத்திக்கு வர வேண் டாம். ராமன் கோவில் திறப்பு விழாவிற்குச் சில ருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மட்டுமே பங் கேற்பார்கள். அதனால் பொது மக்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் உண்மை என்னவென்றால் தேர்தலுக்காக இந்த திறப்புவிழா நாடகம் என்பது அப்பட்டமாக தெரிகிறது, வெளிப்பிர கார வேலைகள் மட்டுமே அவசர அவசரமாக முடிக் கப்பட்டுள்ளது, அதுவும் தற்காலிக பூச்சுதான், உட்சுவர் மற்றும் இதர அலங்காரப்பணிகள் துவக்கமே இன்றுவரை நடைபெறவில்லை. இந்தப் பணிகள் முடிக்க இன்னும் ஒராண்டுகூட ஆகலாம் என்று தெரி கிறது. அப்படி இருக்க அரைகுறைப் பணிகள் நடந்து முடிந்த ராமன் கோவிலில் மக்கள் வந்தால் உண்மை வெளி யாகிவிடும் என்ற அச்சத் தில் முதலில் கோவில் சார்பாக யாரும் வர வேண்டாம் என்றார்கள். இப்போது பிரதமர் மோடியே யாரும் வர வேண்டாம் வீட்டிலி ருந்தே ராமனைக் கும்பிட் டுக் கொள்ளுங்கள் என்கிறார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *