குளித்தால் கொடூரமா?

1 Min Read

சாமியார் ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில், நதியின் ‘புனிதம்’ பாழாகி விட்டது என்று கூறி, சிறுமியை ஹிந்துத்துவா குண்டர்கள் சித்திரவதை செய்கின்றனர்.
இந்த செயலின் காட்சிப் பதிவு பரவலாகி வருகிறது.
பாழாய்ப் போன பா.ஜ.க. ஆட்சி வந் தாலும் வந்தது; மனிதாபிமானம் என்பதை மத வாத யானையின் காலில் போட்டு மிதித்து மகிழ்ச்சி நதியில் ஆடிப் பாடும், ஆகாயம் வரை தாவிக் குதிக்கும் இந்த அற்பத்தனத்துக்கு முடிவே இல்லையா?
மக்கள் நாயகமாவது மண்ணாங்கட்டி யாவது – அதெல்லாம் அற்பம்! அற்பம்!!
கேட்டால் சொல்லுவார்கள், ‘‘எங்கள் மகாபாரதத்தில் ஏகலைவன் கட்டை விரலை துரோணாச்சாரியார் காணிக்கையாகப் பெறவில்லையா? எங்கள் இராமாயணத்தில் சம்பூகன் தலையை எங்கள் இராமபகவான் வாளால் வெட்டிக் கொலை செய்ய வில்லையா?” என்பார்கள்.
மேலும் கேட்டால், ‘‘பார்ப்பான் கொலை செய்தால், சிகைச்சேதம் (தலைமயிரைக் கத்தரிப்பது), பார்ப்பனர் அல்லாதார் கொலைச் செய்தால் சிரச்சேதம் (தலையை வெட்டுதல்) என்று எங்கள் மனுதர்ம சாஸ்திரம் சொல்லுகிறதே!” என்பர்.
‘‘மதம் யானைக்கோ, நாய்க்கோ பிடித் தாலும் ஆபத்து!”
மனிதனுக்குப் பிடித்தால் வேறு எல்லா வற்றையும்விட கொடூரமான ஆபத்தோ, ஆபத்து!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *