சென்னையில் ஜன. 7, 8இல் உலக முதலீட்டாளர் மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

viduthalai
1 Min Read

சென்னை, ஜன.2- சென்னையில் ஜனவரி 7, 8ஆம் தேதிகளில் பிர மாண்டமாக நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இணையும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத் துள்ளார்.

தமிழ்நாட்டை 2030ஆம் ஆண் டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றுவதற்கான இலக்கை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார்.
அதன் அடிப்படையில், தொழில் துறையில் பல்வேறு பிரிவுகளில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக் கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் வரும் ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

இதில் முந்தைய முதலீட்டா ளர்கள் மாநாடுகளை விஞ்சும் வகையில் முதலீடுகளுக்கான ஒப் பந்தங்கள் பெறப்பட உள்ளன. இதற்காக, குறு, சிறுதொழில்துறை சார்பில் மாவட்டங்கள் தோறும் முதலீட்டாளர்கள் சந்திப்பு நடத் தப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந் தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதவிர, உலக முதலீட்டா ளர்கள் மாநாட்டுக்கான ஆயத் தப்பணிகளை தற்போது தமிழ்நாடு தொழில்துறை செய்து வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘‘2024ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அது குறித்த ஆர்வம் மென்மேலும் பெருகி வருகிறது.
2030ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் ஆவதற்கான செயல் திட்டத்தை உலக முதலீட் டாளர் மாநாட்டில் வெளியிடத் தமிழ்நாடு மும்முரமாகிறது.
தமிழ்நாட்டின் துடிப்பு மிகுந்த தொழிற்சூழலை வெளிக்காட்டும் பிரம்மாண்டமான மாநாட்டில் வரும் ஜன 7, 8 தேதிகளில் இணைந்திடுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *