புதுச்சேரி: தந்தை பெரியார் 50 ஆவது ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்

viduthalai
1 Min Read

புதுச்சேரி, ஜன. 1- திராவிடர் கழக இளைஞரணிச் சார்பில் 27.12.2023 புதன்கிழமை புதுவைத் தமிழ்ச் சங் கத்தின் குளிரூட்டப்பட்ட அரங் கில் பெரியாரின் இறுதி முழக்கமும் நமது உறுதி முழக்கமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடை பெற்றது. திராவிடர் கழக இளைஞ ரணித் தலைவர் தி.இராசா தலை மையில் ச.சித்தார்த்தன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து நோக் கவுரை ஆற்றினார்.

மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் வே.அன்பரசன், துணைத் தலைவர் மு. குப்புசாமி, காப்பாளர் இர.இராசு, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கு.இரஞ்சித் குமார், பொதுக்குழு உறுப்பினர் கள் விலாசினி ராசு, லோ. பழனி நகராட்சி தலைவர்கள் மு. ஆறு முகம், சு.துளசிராமன், எஸ்.கிருஷ் ணசாமி, செ,இளங்கோவன் ஆகி யோர் உரையாற்றினர்.
திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு “தந்தை பெரியாரின் இறுதி முழக்கமும் 50 ஆண்டுகள் கடந்தும் நாடாளு மன்றத்தில் அய்யாவின் கருத்து நீக்கமும்” என்ற தலைப்பில் ஒரு மணிநேரம் மிகவும் அற்புதமான ஆய்வுநோக்கிலான உரையை நிகழ்த்தினார். சா.பிரபஞ்சன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ.நடராசன், விடுதலை வாசகர் வட்டச் செயலா ளர் ஆ.சிவராசன் கொம்யூன் பஞ்சாயத்து செயலாளர் இரா. ஆதி நாராயணன், அண்ணா பேரவை சிவ. இளங்கோ, மீனவர் விடுதலை வேட்கைகள் நிறுவனத் தலைவர் இரா.மங்கையர்ச்செல்வன் மற்றும் சமூக இயக்கத் தோழர்கள் தினா, வீர.மோகன் உட்பட பலர் வருகை தந்தனர். நிகழ்ச்சியில் வந்திருந்த அனைவருக்கும் திருக்குறள் சண் முகம் மூலிகைத் தேநீர் வழங்கி சிறப்பித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *