5 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஜன. 1- 5 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட கொலிஜியம் பரிந்துரை செய்துள் ளது.
அதன்படி, அலகாபாத், ராஜஸ்தான், கவுகாத்தி, பஞ்சாப் மற்றும் அரியானா மற்றும் ஜார்க் கண்ட் ஆகிய உயர் நீதிமன்றங் களுக்கு புதிய தலைமை நீதிபதியை நியமிக்க பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதி பதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலி ஜியம் அவ்வப்போது புதிய நீதி பதிகள், நீதிபதிகள் பதவி உயர்வு தொடர்பான பரிந்துரைகளை ஒன்றிய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வருகிறது.

அதை ஆய்வு செய்யும் சட்ட அமைச்சகம், தேர்வு செய்யப்பட் டவர்களின் பட்டியலை குடியர சுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி அறிவிப்பு வெளியிடும். இந்த நிலையில், தற்போது 5 உயர்நீதிமன் றங்களுக்கு புதிய தலைமை நீதிபதி களை நியமிக்க கொலிஜியம் பரிந் துரைத்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ பட்டியலை உச்ச நீதி மன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.அதன்படி, அலகா பாத் உயர்நீதிமன்ற தலைமை நீதி பதியாக ராஜஸ் தான் உயர்நீதிமன்ற நீதிபதி அருண் பன்சாலியை நிய மிக்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத் தின் தலைமை நீதிபதியாக நியமிக்க ராஜஸ்தான் உயர் நீதி மன்ற நீதிபதி மணீந்திர மோகன் சிறீவஸ்தவா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதி பதி விஜய் பிஷ்னோய் கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியா கவும், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி ஷீல் நாகு பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி யாகவும், ஒடிசா உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.சாரங்கி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பரிந்துரைக்கப் பட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *