‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடு! அடுத்த வாரம் பேச்சுவார்த்தை!

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜன.. 1 – நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக உள்ள நிலையில், “இந்தியா” கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடு குறித்து அடுத்த வாரம் முதல், பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்த தேர்தல் ஆணையம் திட்ட மிட்டுள்ளது. இந்நிலையில், நாடாளு மன்ற தேர்தலுக்கான பணிகளில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக உள்ளது.

மாநில கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி அமைப்பதற்காக முகுல் வாஸ்னிக் தலைமையில் காங்கிரஸ் அய்வர் குழுவை அமைத்துள்ளது. அந்த குழுவானது கடந்த 2 நாட்களாக மகாராட்டிரா, பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில காங்கிரஸ் நிர்வாகி களுடன் ஆலோசனைகளை நடத்தி யுள்ளது.ஜனவரி 4 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள், மாநில தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள நிலை, எந்தெந்த கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்ய முடியும் என்பது உள்ளிட்ட அம் சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

அன்றைய நாள் ப. சிதம்பரம் தலை மையிலான தேர்தல் அறிக்கை குழு கூடி ஆலோசனை நடத்த உள்ளது.

ஜனவரி 8 ஆம் தேதி ராகுல்காந்தி தொடங்க உள்ள நியாய பேரணியில் இலச்சினை, முழக்க வாசகம், பாடல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் மாநில வாரியாக தொகுதி உடன்பாடுகள் குறித்து “இந்தியா” கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்த காங்கிரஸ் திட்ட மிட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *