சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு
கிருட்டினகிரி, அக். 20- கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றிய, நகர திராவிடர் கழகம் மற்றும் அனைத்து கட்சிகள் சார் பில் காவேரிப்பட்டணத்தில் தந்தை பெரியார் 145ஆவது ஆண்டு பிறந்தநாள் – சமூகநீதி நாள் விழா பெரியார் பட ஊர்வலம் நடைபெற்றது.
காவேரிப்பட்டணம் பாலக் கோடு பிரிவு சாலையிலுள்ள பெரியார் சிலைக்கு கழகப் பொதுக் குழு உறுப்பினர் கோ.திராவிட மணி தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைவரும் சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
தி.மு.க. ஒன்றியச் செயலாளர் தேங்காய் சி.சுப்பிரமணி, கிருட்டின கிரி வி.சி.க.மய்ய மாவட்ட செய லாளர் அ.மாதேசு, தி.மு.க. அமைப்பு சார ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் கே.எஸ்.செந்தில் குமார், சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர் ஜே.கே.எஸ்.சாஜித், இளைஞரணி துணை அமைப்பாளர் கே.எஸ்.சிவசங்கர், மதிமுக தீர்மான குழு உறுப்பினர் வி.கே.இளங்கோ, ஒன்றிய செயலா ளர் மாதன், காவேரி, சி.பி.அய். ஒன்றியச் செயலாளர் க.சுரேசு, சங் கர், விசிக ஒன்றியச் செயலாளர்கள் பெ.சசிகுமார், ஆலப்பட்டி இர மேசு, புலி.இராஜேஷ், தொ.ரகு, பலராமன், சி.பி.அய்(எம்) இராம சாமி, கழகப் பொதுக்குழு உறுப்பி னர் தா.சுப்பிரமணியம், மாவட்டத் துணைச்செயலாளர் தி.கதிரவன், ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், செயலாளர் பெ.செல்வேந்திரன், மேனாள் ஒன்றியத் தலைவர் சி. சீனிவாசன், கிருட்டினகிரி ஒன்றி யத் தலைவர் த.மாது, செ.ப.மூர்த்தி, பூ. இராசேந்திரபாபு, இல.ஆறு முகம், வே.புகழேந்தி, சி.இராசா, ப.க. ஆசிரியர்கள் மா.சிவசங்கர். வ.சசிகுமார் மற்றும் விஜி, கலை யரசி, தி.அ.அனலரசு, தி.அ.அறிவுக் கனல், மூ.சங்கதமிழ், மாஅன்புச் செல்வன், மா.அறிவுச்செல்வன் உள்பட திராவிடர் கழகம், தி.மு.க., வி.சி.க., ம.தி.மு.க., சி.பி.அய்., சி.பி. அய்.(எம்) உள்ளிட்ட அமைப்பு களின் நிர்வாகிகளும், கழகத் தோழர்களும் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.