சுய விளம்பரத்துக்கு அளவில்லையா?

2 Min Read

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில்
பிரதமர் மோடியின் செல்ஃபி பாய்ண்டுக்கு மக்களின் வரிப் பணம் ரூ.1.62 கோடி செலவாம்!
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்

புதுடில்லி,டிச.28- நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் அமைக்கப் படும் பிரதமரின் செல்பி பாய்ண் டுகள் குறித்து ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரியான அஜய் போஸ் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் எழுப்பிய கேள் விக்கு ரயில்வே வாரியம் பதிலளித் துள்ளது.
அதில், ரயில் நிலையங்களில் பிரதமர் மோடி படத்துடன் அமைக்கப்படும் நிரந்தர செல்ஃபி பாய்ண்டுகளுக்கு 6 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், தற்காலிக செல்ஃபி பாய்ண்டுகளுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என மொத்தம் ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேராடூன், அம்பாலா, டில்லி, அமிர்தசரஸ், அயோத்தி, சண்டிகர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்ஃபி பாய்ண்டுகள் அமைக்கப்படும்என்று தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், திருச்சி, தஞ்சை, திருவாரூர், வேலூர் உள்ளிட்ட 11 ரயில் நிலையங்களில் பிரதமரின் 3டி செல்பி ஒளிப்படக் கூடங்கள் அமைக்கப்பட உள்ளதும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

மத்திய மண்டலத்தில் மட்டும் இவ்வளவு பெரிய தொகை என்றால், நாடு முழுவதும் உள்ள 18 ரயில்வே மண்டலங்களிலும் இத்தகைய செல்பி பாயிண்ட் வசதி ஏற்படுத்தப் பட்ட எத்தனை கோடிகள் தேவைப் படும் என்று கேள்வி எழுந்துள்ளது.
ரயில்வே துறையில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணச்சலுகை நிறுத்தப்பட்டு விட்டது. 2022-_2023 நிதியாண்டில் மட்டும் மூத்த குடிமக்களுக்கான கட்டணச்சலுகை இல்லாததால், ரயில்வே துறைக்கு 2 ஆயிரத்து 242 கோடி ரூபாய் வருவாய் கிடைத் திருக்கிறது. ஆனால், மக்களுக்கான சலுகைகளை பறித்துவிட்டு, மக்க ளின் வரிப்பணத்தை மோடி அரசு சுய விளம்பரங்களுக்கு பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது. ரயில் நிலையங்களில் பிரதமர் மோடியின் செல்ஃபி பாய்ண்டுகள் அமைக்கப்படுவது, மக்களின் வரிப்பணத்தை முற்றிலும் வீணடிக்கும் செயல் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
மாநிலங்களுக்கான வறட்சி மற்றும் வெள்ள நிவாரணம் வழங்கவில்லை, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கான விநிழிஸிணிநிகி நிதியும் நிலுவையில் உள்ளது,
ஆனால் மலிவான தேர்தல் விளம்பரங்களுக்கான மக்களின் வரிப்பணத்தை மோடி அரசு தாராளமாக செலவு செய்வதாக கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி யினர் விமர்சித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *