நிவாரண நிதியை உடனடியாக வழங்குக! ஜன.8 தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

1 Min Read

சென்னை, டிச. 28- பேரிடர் நிவார ணத்தை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவித் துள்ளன.
இது தொடர்பாக இந்திய கம்யூ னிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியதாவது:

பேரிடர் நிவாரண நிதியாக ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.21,652 கோடி நிதி கோரப்பட்டுள்ளது.
பிரதமரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நேரடியாக கோரிக்கை மனுவும் அளித்துள்ளார்.
ஆனால் இதுவரை ஒரு ரூபாய்கூட ஒன்றிய அரசு நிவாரணமாக வழங்கவில்லை. எனவே மாநில அரசு கோரியி ருக்கும் நிவாரண நிதியை உடனடி யாக ஒன்றிய அரசு வழங்கவும், பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தியும் வரும் ஜன.8ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசின் அலுவல கங்களுக்கு முன்பாக கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தப்படும் என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *