திரையுலகில் முத்திரை பதித்த சிறந்த நடிகரும், தே.மு.தி.க. என்ற அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவருமான மதிப்புக்குரிய நண்பர் விஜயகாந்த் அவர்கள் (வயது 71) உடல் நலக் குறைவு காரணமாக இன்று (28.12.2023) சென்னை யில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்! வேதனை யடைகிறோம்!!
வெள்ளையுள்ளம் கொண்டு கறுப்பு வைரமாகவே அவர் வாழ்ந்தவர்!
சிறந்த மனிதர் என்ற பெருமைக்குரியவர்!!
பல ஆண்டுகளுக்கு முன்னரே அவருக்கு ‘பெரியார் விருது’ (30.4.1994)அளித்து மகிழ்ந்தவர்கள் திராவிடர் கழகத்தவர்.
கட்சியின் பெயரில்கூட “தேசிய முற்போக்கு திராவிட கழகம்” என்ற திராவிட உணர்வைப் பதித்தவர்.
அவரது மறைவு ஒரு பேரிழப்பாகும். கலையுலகிலும், அரசியலிலும் தனித்த அடையாளத்துடன் வாழ்ந்து வரலாறு படைத்த அவரது மறைவால் பாதிப்புக் குள்ளாகியிருக்கும் அவரது துணைவியாரும், தே.மு.தி.க. பொதுச் செயலாள ருமான திருமதி பிரேமலதா விஜயகாந்த், அவருடைய மகன்கள் உள்பட குடும் பத்தினர், தே.மு.தி.க.வின் பொறுப் பாளர்கள், கலையுலகத்தினர் எல்லோருக்கும் நமது ஆறுதலையும், மறைந்தவருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
28.12.2023
குறிப்பு: மறைவுற்ற தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி இன்று (28.12..2023) பிற்பகல் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.