தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் ஜானகி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

1 Min Read

சென்னை, டிச. 27- “சென்னையில் 26.12.2023 அன்று நடைபெற்ற அ.தி.மு.க. இயக்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டத்தில் அன்னை ஜானகி எம்.ஜி.ஆர். அவர் களின் நூற்றாண்டு விழா வைச் சிறப்பாக கொண் டாடுவது என முடி வெடுக்கப்பட்டிருப் பதற்கு எம்.ஜி.ஆர் அவர் களின் குடும்பத்தார் சார் பிலும் ஜானகி அம்மை யார் குடும்பத்தார் சார் பிலும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், நன்றியையும்
தெரிவித்துக் கொள்கிறோம் என எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியின் தலைவர் முனைவர் குமார் ராஜேந்தின் கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பிறகு தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சராக பொறுப்பேற்றவரும் அவர்தான். தன்னுடைய வாழ்நாளில் இறுதிவரை அ.தி.மு.க. என்ற இயக்கத்தை பாதுகாத்த ஜானகி எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அவருடைய நூற்றாண்டு தருணத்தில் விழா எடுக்க அ.தி.மு.க. முன்வந்திருப்பது கூடுதல் சிறப்பு.

இப்படிப்பட்ட சிறப்புமிக்க ஜானகி அம்மையார் அவர்களுக்கு விழா எடுக்கும் நேரத்தில் அவருடைய முழு உருவச் சிலையை அ.தி.மு.க. தலைமைக் கழக அலுவலகத்தில் நிறுவுவது அவருக்கும் பெருமை சேர்க்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *