ஆண்டு 99இல் அடி எடுத்து வைக்கும் பொதுவுடைமை வீரர் தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களுக்கு வாழ்த்து!

1 Min Read

இளம் பருவந்தொட்டு, பொதுவுடை மைச் சித்தாந்தத்தில் தோய்ந்து தம் வாழ்நாளை எல்லாம் அந்தத் தத்துவத் துக்கும், அதுசார்ந்த இந்தியக் கம்யூனிஸ் டுக் கட்சிக்கும் நூறு விழுக்காடு அளவில் அர்ப்பணித்த அரும்பெரும் தொண்டறச் செம்மல் தோழர் ஆர்.என்.கே. அவர்கள்.
பல்லாண்டுகள் சிறைவாசம் கண்டு சித்திரவதைக்கு ஆளானவர். கொள்கை யில் தீவிரம், அதே நேரத்தில் அடக்கம், எளிமை, பண்பாட்டுத் தளத்தில் உயர்ந்து நிற்கும் தகைசால் தமிழர் அய்யா நல்லகண்ணு அவர்கள்.

தொண்ணூறு வயது முதிர்ந்த, பெரியார் பெருந்தொண் டர்களுக்கும், கட்சிக்கு அப்பாலும் பொதுநலம் பேணிய பெருமக்களுக்கும் சென்னைப் பெரியார் திடலில் பாராட்டு விழாவினை திராவிடர் கழகம் நடத்தியதுண்டு, அந்நிகழ்ச்சியில் தோழர் நல்லகண்ணு அவர்களைப் பாராட்டி மகிழ்ந்தோம். நல்ல உடல் நலத்துடன் மேலும் நாட்டுக்கு நற்தொண்டு ஆற்றிட அவர் நீடு வாழ வாழ்த்துகிறோம்.

– கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை,
26.12.2023 

குறிப்பு: தொலைப்பேசி மூலம் தோழர் ஆர்.என்.கே. அவர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துத் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *