இந்திய கச்சா எண்ணெய் கப்பல்மீது தாக்குதல் – விரைந்த போர்க்கப்பல்

viduthalai
0 Min Read

ஜெட்டா. டிச.26 இந்திய கச்சா எண்ணெய் கப்பல் மீது நடுக்கடலில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை நோக்கி கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த நிலையில், அந்த கப்பலின் அருகே வந்த அடையாளம் தெரியாத ட்ரோன் ஒன்று இந்திய கச்சா எண்ணெய் கப்பல் மீது திடீரென தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. கப்பலில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் இருப்பவர்களை மீட்க கடலோர காவல்படையின் விக்ரம் கப்பல் விரைந்தது.

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *