41 உயிர்களைக் காப்பாற்றிய சுரங்கத் தொழிலாளர்களுக்கு பட்டை நாமம் சாற்றிய பா.ஜ.க. அரசு

viduthalai
3 Min Read

அரித்துவார், டிச.26 உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் சுரங்கத்துக்குள் சிக்கிய 41 பேரின் உயிர்களைக் காப்பாற்றிய எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள் மாநில அரசு தங்களுக்கு வழங்கிய காசோலையை ஏற்க மறுத்துள்ளனர்.

சில்க்யரா பகுதியில் உள்ள மலையைக் குடைந்து 4.5 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டு வந்த சுரங்கவழிப் பாதையில் கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட மண் சரிவு காரணமாக சுரங்கப்பாதை உள்வாங்கியது. இந்த விபத்தின்போது அங்கு பணியாற்றிய 41 பேர் சுரங்கத்துக்குள் சிக்கினர், இவர்களைக் காப்பாற்ற பல கட்ட முயற்சிகள் மற்றும் வெளிநாட்டு தொழில்நுட்பம் ஆகியவை தோல்வி அடைந்தது.

ஒன்றிய மற்றும் மாநில அரசு பேரிடர் குழு அதிகாரிகள் அனைவரும் அங்கு முகாமிட்ட நிலையில் 17 நாட்கள் கழித்து நவம்பர் 28ஆம் தேதி அவர்கள் மீட்கப்பட்டனர். இதில் கடைசி முயற்சியாக 15 மீட்டர் நீளத்திற்கு எலி வளை சுரங்கத் தொழிலாளர்களின் உதவியுடன் மேற்கொண்ட நடவடிக்கையே அந்த 41 பேரும் உயிருடன் மீட்கப்பட காரணமாக இருந்தது.
எலி துளை சுரங்கப் பணியை மேற்கொள்ள டில் லியைச் சேர்ந்த ராக்வெல் எண்டர் பிரைசஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த 12 தொழி லாளர்கள் ஈடுபட்டனர்.

அறிவியல்பூர்வமான முறையல்ல என்றும் மிகவும் ஆபத்தானது என்றும் கூறி கைவிடப்பட்ட இந்த எலி வளை சுரங்கம் தோண்டும் பணியில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து 41 பேரின் உயிரை மீட்ட இந்த பணியாளர்களுக்கு ரூ. 50,000க்கான காசோலையை உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி வழங்கினார்.
சுரங்கப்பணியின் போது உள்ளே சிக்கிக் கொண்டு தவித்த தொழி லாளர்கள் உயிருடன் வெளியே வந்த நிலையில் அவர்களுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த 41 உயிர்களை மீட்ட தங்களுக்கு 50000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டி அப்போதே அவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும், எலி வளை சுரங்கப் பணி கைவிடப்பட்டதால் தங்களுக்கு உரிய மாற்று வேலைகளை வழங்குமாறு கோரிக்கை வைத்தனர்.

தவிர, நவீன தொழில்நுட்பங்கள் உதவாத நிலையில் மனித உழைப்பின் மூலமே சுரங்கத்தில் சிக்கிய நபர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கான உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குமுறிவருகின்றனர்.

இவர்களின் கோரிக்கை குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய மாநில அரசு இதுவரை அவர்களின் கோரிக்கைகளுக்கு எந்த பதிலும் அளிக்காததை அடுத்து தங் களுக்கு வழங்கப்பட்ட காசோலையை பணமாக்கப்போவதில்லை என்றும் அதனை மாநில அரசிடமே திரும்ப வழங்க இருப்பதாகவும் கூறியுள்ளனர். சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட 41 பணியாளர்களை மீட்க நவீன தொழில் நுட்பங்களுக்கும் வல்லுனர்களுக்கும் பல கோடிகளை உடனுக்கு உடன் கொடுத்து வரவழைத்தது.
ஆனால் அவை அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில் டில்லியில் போர்வெல் நிறுவனத்தில் கூலித் தொழிலாளர்களாக பணியில் உள்ள வர்களை கைவிடப்பட்ட எலிவளை சுரங்கம் தோண்டும் முறையில் கூலித்தொழிலாளர்கள் 12 பேர் உடனடியாக களத்தில் இறங்கி 20 மணி நேரத்திற்குள் மீட்டனர்.

சுமார் இரண்டுவாரம் காலமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவர்களை காபாற்றிய கூலித் தொழிலாளர்களுக்கு அரசு வேலை அவர்கள் வசிக்கும் குடிசைவீடுகளுக்குப் பதிலாக அரசு செலவில் வீடுகள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு அரசு செலவில் கல்வி என்று எல்லாம் அறிக்கை விட்ட உத்தராகண்ட் பாஜக அரசு, தற்போது அனைவருக்கு வெறும் 50000 காசோலையை மட்டும் தந்து விட்டு ஒதுங்கிவிட்டது. இவர்களின் வாக்குறுதியை நம்பி டில்லியில் அனைத்தையும் வீட்டு விட்டு குடும்பத் தோடு உத்தரகண்ட் வந்த கூலித் தொழிலாளர்கள் தற்போது மீண்டும் குடும்பத்தோடு டில்லி நடைபாதைக்கே திரும்ப உள்ளனர்.

தேவைப்படும் நேரத்தில் போலி வாக்குறுதிகளை அளித்து விளம்பரம் தேடிக்கொண்ட உத்தராகண்ட் பாஜக அரசு தற்போது கூலித் தொழி லாளர்களை ஏமாற்றிவிட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *