போக்குவரத்து துறை தொழிற்சங்கங்களுடன் டிசம்பர் 27இல் பேச்சுவார்த்தை தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு

viduthalai
1 Min Read

சென்னை, டிச. 24- போக்குவரத்துக் கழக தொழிற் சங்கங்களின் வேலைநிறுத்த அறிவிப்பு தொடர்பாக டிச.27-ஆம் தேதி தொழிற்சங்கங்களுடன் தொழிலாளர் நலத் துறை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை சார்பில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் மேலாண் இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
போக்குவரத்துக் கழகங்களில் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தம் செய்யப் போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக டிச.27-ஆம் தேதி மாலை 4 மணியளவில் தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் தனி இணை ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதில் தொழிற் சங்கங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழங்களின் அதிகாரிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

மேலும், வேலைநிறுத்தம் போன்ற நேரடி நடவடிக் கைகளில் தொழிலாளர்கள் ஈடுபட வேண்டாம். பொது அமைதி காத்து சுமூக முடிவை எதிர்நோக்குமாறு இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *